குடிசையை சேதப்படுத்திய காட்டு யானைகள் – நூலிலையில் உயிர் தப்பிய நான்கு பேர்..!

1 Min Read

கட்டுமான தொழிலாளர்கள் தங்கி இருந்த குடிசையை இரவில் காட்டு யானைகள் சேதப்படுத்தின. அப்போது நான்கு பேர் நூலிலையில் உயிர் தப்பினர்.

- Advertisement -
Ad imageAd image

கோவை மாவட்டம், அடுத்த சின்ன தடாகம் பகுதியில் இட்லி கடை நடத்தி வருபவர் ரங்கராஜ். இவர் அதேபகுதியில் உள்ள சௌடாம்பிகை நகரில் சொந்தமாக வீடு கட்டிக் கொண்டு உள்ளார். அதற்காக கட்டுமானம் பணிகள் செய்யும் வேலையாட்கள் தங்குவதற்கு குடிசை அமைத்து அதில் தங்கி வருகின்றனர்.

காட்டு யானைகள்

இந்த நிலையில் நேற்று இரவு தொழிலாளர்கள் நான்கு பேர் அந்த குடிசையில் தூங்கிக் கொண்டு இருந்த போது சுமார் இரவு 11:00 மணிக்கு மேல் அங்கு வந்த இரண்டு காட்டு யானைகள் அவர்கள் தங்கி இருந்த குடிசையை சேதப்படுத்தி அவர்களை தாக்க முயன்றது.

அப்பகுதி மக்கள்

அப்பொழுது திடீரென விழித்துக் கொண்ட தொழிலாளர்கள் அங்கு இருந்து தப்பி ஓடினர். இதனால் குடிசையை மட்டும் சேதப்படுத்தி விட்டு சென்றது. இது குறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்து உள்ளனர்.

மேலும் அப்பகுதிக்கு யானைகள் வராமல் பொதுமக்களின் உயிர்களை பாதுகாக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர். இந்த சம்பவம் சின்ன தடாகம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Share This Article

Leave a Reply