திரிபுராவில் ஓடும் காரில் மாணவி பலாத்காரம்.

2 Min Read

புது டில்லியில் மாணவி நிர்பயா ஓடும் பேருந்தில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதைப்போல, திரிபுராவில் ஓடும் காரில் வைத்து மாணவி பாலியல் சீண்டலுக்கு  உள்ளாக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தி உள்ளது.

- Advertisement -
Ad imageAd image

அமடாலி பைபாஸ் நெடுஞ்சாலையில் ஒரு இளம் வயது மயங்கிய நிலையில் கிடந்தார்  இதையடுத்து, சாலையில் இருந்த பொதுமக்கள்  அந்த இளம் பெண்ணை மீட்டு அருகிலிருந்த மருத்துவமனையில் அனுமதித்தனர்.

மருத்துவர்கள் சிகிச்சை மேற்கொண்டு பரிசோதனை செய்ததில் அந்த பெண் சிலரால் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது தெரியவந்தது.

பாதிக்கப்பட்ட கல்லூரி மாணவி, கல்லூரி முடித்துவிட்டு இரவில் வீடு திரும்பி கொண்டிருந்தார். அப்போது வீட்டுக்கு செல்லும்  வழியில் கவுதம் ஷர்மா என்ற நபர் அந்த பெண்ணை ஏற்கனவே அறிமுகமானவர், தனது காரில் வருமாறு கூறியுள்ளார். இந்த பெண்ணும் தனக்கு தெரிந்தவர் என்ற காரணத்திற்கு காரில் ஏறி பயணித்துள்ளார். அந்த நேரத்தில் கவுதம் ஷர்மாவின் நண்பர்கள் 2 பேரும் காரில் இருந்துள்ளனர்.

இதை பயன்படுத்தி கொண்ட அந்த 3 பேரும், அந்த பெண்ணிடம் முதலில் அத்துமீறியுள்ளனர், தொடர்ந்து, அந்த  பெண்ணை துன்புறுத்தி பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு, அமடாலி பைபாஸ் நெடுஞ்சாலையில் தள்ளி விட்டு சென்றுள்ளனர்.

பின்னர் மருத்துவமனையில் அந்த பெண்ணை அனுமதிக்கப்பட்ட பின்னர், அவரது பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மாணவியின் தாய் அளித்த புகாரின்பேரில் கவுதம் ஷர்மா  கைது செய்யப்பட்டார். தொடர்ந்து காரை ஓட்டிய சுதீப் சேத்ரி 31 ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

மூன்றாவது குற்றவாளியான மகேஷ் கலா பகுதியைச் சேர்ந்த பிரசென்ஜித் பால்  நேற்று கைது செய்யப்பட்டார். குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவரின் வீட்டில் இருந்து 90 லட்சம் ரூபாயையும் போலீசார் மீட்டனர்.

இதுகுறித்து மேற்கு திரிபுரா எஸ்பி கிரண் குமார் கூறுகையில், “ இந்த வழக்கு தொடர்பாக மூன்றாவது குற்றவாளியை நாங்கள் கைது செய்தோம். அவரது வீட்டில் இருந்து ஐபிஎல் பெட்டிங் மற்றும் பணமோசடி தொடர்பாக சில ஆவணங்கள் மற்றும் மடிக்கணினி மற்றும் ஏடிஎம் கார்டுகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.

அவர் மீது சூதாட்டச் சட்டத்தின் கீழும், பணமோசடி செய்ததற்காகவும் தனி வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. பாலியல்வன்கொடுமை வழக்கிலும் பிரசென்ஜித் பால் தொடர்பு இருப்பதை முதன்மை சாட்சியம் நிரூபிக்கிறது. தொடர்ந்து இதுகுறித்து விரிவாக விசாரித்து வருகிறோம்” என தெரிவித்தார்.

இதற்கிடையில், தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அந்த பெண்ணின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்படுகிறது.

இச்சம்பவத்தைத் தொடர்ந்து, திரிபுராவில் மாணவிகள், பெண்கள் அமைப்புகள் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டதுடன், குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Share This Article

Leave a Reply