பறவைகள் இஞ்சின் மீது மோதியதால் நடுவானில் விமானத்தில் பற்றிய தீ..!

1 Min Read

பறவைகள் மோதியதால் ஆஸ்திரேலியா விமானம் நடுவானில் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதன் காரணமாக அந்த விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

- Advertisement -
Ad imageAd image

நியூசிலாந்தின் குயின்ஸ்டவுண் நகரில் இருந்து மெல்பேர்ண் நகருக்கு வெர்ஜீன் ஆஸ்திரேலியா விமான நிறுவனத்தின் விமானம் புறப்பட்டது. விமானத்தில் நூற்றுக்கு மேற்பட்ட பயணிகள் பயணித்தனர். குயின்ஸ்டவுனில் இருந்து விமானம் புறப்பட்டு 50 நிமிடங்களில் நடுவானில் பறந்து கொண்டிருந்தது.

பறவைகள் இஞ்சின் மீது மோதியதால் நடுவானில் விமானத்தில் பற்றிய தீ

அப்போது, விமான எஞ்சினில் திடீரென தீ பற்றியது. இதனால், விமானத்தில் ஒரு எஞ்சின் முழுவதும் செயல் இழந்தது. இதை அடுத்து, விமானம் அவசர அவசரமாக குயின்ஸ்டவுன் விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது.

இந்த சம்பவத்தில் எவருக்கும் எந்த வித பாதிப்பும் ஏற்படவில்லை. விமானத்தில் இருந்த பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். பின்னர், பயணிகள் அனைவரும் மாற்று விமானம் மூலம் மெல்பேர்ண் நகருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

அவசரமாக தரையிறக்கம்

நடுவானில் விமானம் பறந்து கொண்டிருந்த போது அதன் எஞ்சின் மீது பறவைகள் மோதியதாலே தீ பற்றியதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. இந்த சம்பவம் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Share This Article

Leave a Reply