- பட்டுக்கோட்டை நாடியம்மன் கோயிலுக்கு சாமி கும்பிடுவதற்காக புதிய காரை ஓட்டி வந்த பொழுது கார் கட்டுப்பாட்டை இழந்து கோயிலுக்குள் புகுந்ததால் மூதாட்டி பலியானார்- மற்றொரு பெண் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதி.

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை லட்சத்தோப்பு தெற்கு தெருவை சேர்ந்தவர் நாடிமுத்து .இவர் புதிதாக கார் ஒன்றை வாங்கியுள்ளார். இந்த காரை நாடியம்மன் கோயிலுக்கு எடுத்துச் சென்று சாமி கும்பிட்டு வருவதற்காக காரை ஓட்டிக்கொண்டு கோயிலுக்கு சென்றுள்ளார் .அப்போது கோயில் வாசல் அருகே சென்ற போது திடீரென கார் கட்டுப்பாட்டை இழந்து கோயிலுக்குள் புகுந்தது. இதில் கோயில் வாசலில் விளக்கமாறு விற்பனை செய்யும் எமிலிஸ் மேரி வயது 75 என்ற மூதாட்டி மீது கார் மோதியதில் சம்பவ இடத்திலேயே இறந்தார். அத்தோடு அங்கு நின்றிருந்த இந்துமதி என்ற பெண் காரின் அடிப்பகுதியில் சிக்கி பலத்த காயமடைந்த நிலையில் பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவம் தொடர்பாக தகவல் அறிந்த பட்டுக்கோட்டை நகர போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இறந்த மூதாட்டி உடலை பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனை செய்வதற்காக எடுத்துச் சென்றுள்ளனர். திடீரென கார் கோயிலுக்குள் புகுந்து விபத்தை ஏற்படுத்திய சம்பவத்தால் அங்கு நின்ற பக்தர்கள் சிறிது நேரம் அதிர்ச்சியில் ஆழ்ந்தனர். மேலும் இச்சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 



Leave a Reply
You must be logged in to post a comment.