ஆதிதிராவிட நலத்துறையின் மாநில அளவிலான ஆய்வு குழு பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து மெட்ராஸ் உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவு.!

2 Min Read
மதுரை உயர் நீதிமன்றம்
  • முதியவரின் ஓய்வூதிய பணப்பலன்களை நிறுத்தி வைத்து ஆதிதிராவிட நலத்துறையின் மாநில அளவிலான ஆய்வு குழு பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து மெட்ராஸ் உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவு.

தஞ்சையை சேர்ந்த குணசேகரன் என்பவர் மெட்ராஸ் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில், “ஓய்வூதிய பலன்களை நிறுத்தி வைத்து ஆதிதிராவிட பழங்குடியின நலத்துறையின் மாநில ஆய்வு குழு பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக் கோரி மனுவினைத் தாக்கல் செய்திருந்தார்.

- Advertisement -
Ad imageAd image
 

இந்த வழக்கில் விசாரித்த நீதிபதிகள் சுப்ரமணியன், விக்டோரியா கௌரி அமர்வு, “மனுதாரர் பட்டியல் இன பழங்குடியின வகுப்பை சேர்ந்தவர் என 1980ல் தாசில்தாரால் சான்று வழங்கப்பட்டுள்ளது. அந்த அடிப்படையில் மனுதாரர் தனியார் வங்கி ஒன்றில் கிளர்க்காக 1982ல் பணியில் சேர்ந்துள்ளார். அதோடு மனுதாரர் 50 சதவீத மாற்றத்திறனாளி. 2013 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் ஓய்வு பெற்றுள்ளார். அவரது சாதி சான்றிதழ் 1993 ஆம் ஆண்டுதான் சரிபார்க்கப்பட்டுள்ளது. அப்போது வருவாய் மண்டல அலுவலர் மனுதாரர் பட்டியல் பழங்குடியினத்தை சார்ந்தவர் அல்ல என குறிப்பிட்டுள்ளார். பின்னர் அது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் விசாரணை நடத்தியுள்ளார். அதை எதிர்த்து மனுதாரர் தொடர்ந்த வழக்கில் நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. அதனைத் தொடர்ந்து 2019 ஆம் ஆண்டு ஊழல் தடுப்பு கண்காணிப்பு குழு இந்த பிரச்சனை தொடர்பாக விசாரித்து மனுதாரரிடம் விளக்கம் கேட்டுள்ளது. ஆனால் விளக்கம் அளிக்க மனுதாரருக்கு போதிய கால அவகாசம் வழங்கப்படவில்லை என்பது தெளிவாகிறது. அதன் பின்னரே ஆதிதிராவிட நலத்துறையின் மாநில அளவிலான ஆய்வுக் குழு இந்த விவகாரம் தொடர்பான உத்தரவை பிறப்பித்துள்ளது.

 

கொஞ்சம் இதையும் படிங்க : http://thenewscollect.com/d-m-k-is-secluded-on-the-river-bank-near-thanjavur-celebrity-body-did-he-fall-and-die-police-investigation/

இந்த வழக்கை பொறுத்தவரை மனுதாரர் 32 ஆண்டுகள் தனியார் வங்கியில் முறையாக பணியாற்றி, ஓய்வு பெற்றுள்ளார். விசாரணை தாமதமானதால் அவருக்கான ஓய்வூதிய பலன்களை பெறுவதிலும் தாமதம் ஆகியுள்ளது. தற்போது முதிய நிலையில் உள்ள மனுதாரர், மீண்டும் ஒரு விசாரணையை எதிர்கொள்ள வேண்டும் என நாங்கள் விரும்பவில்லை. ஆகவே மனுதாரரது பணப்பலன்களை நிறுத்தி வைத்து ஆதிதிராவிட பழங்குடியின நலத்துறையின் மாநில ஆய்வு குழு பிறப்பித்த உத்தரவு ரத்து செய்ப்படுகிறது. அவருக்கு வழங்கப்பட வேண்டிய பணப்பலன்களை 12 வாரத்திற்கு உள்ளாக வழங்க வேண்டும். மனுதாரரின் வாரிசுகள் பட்டியலின பழங்குடியின வகுப்பைச் சேர்ந்தவர்களுக்கான உரிமையை கோர விரும்பினால் அவர்களின் வகுப்பு ஆவணங்களை வழங்கி உறுதி செய்ய வேண்டும் என குறிப்பிட்டு, வழக்கை முடித்து வைத்தனர்.

Share This Article

Leave a Reply