- விருதுநகர் கிருதுமால் ஆற்றில் உள்ள கருவேல மரங்களை தனி நபர்கள் வெட்டி செல்ல அனுமதி வழங்கிய திருச்சுழி வட்டாட்சியர் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து மாவட்ட நிர்வாகம் அறிக்கை தாக்கல் செய்ய உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு.
விருதுநகர் மாவட்டம் திருச்சுழி வட்டம் உளுத்திமடை பகுதியைச் சேர்ந்த கருணாகரன் தாக்கல் செய்த மனு ,வைகை ஆற்றின் தெற்கு பகுதியில் கிருதுமால் ஆறு உள்ளது. இந்த ஆறானது சிவகங்கை மாவட்டம் பழையனூர் வழியாக விருதுநகர் மாவட்டத்தின் உளுத்திமடை, கட்டனூர் வழியாக வீரசோழன் வரை செல்கின்றது. உளுத்திமடை பகுதியில் இந்த ஆற்றில் 6 கி.மீ. சுற்றளவிற்கு தண்ணீ ர் தடையின்றி செல்வதற்காக கருவேல மரங்களை வெட்டி அகற்றினர்.

இந்த கரு வேல மரங்களை வெட்டி அகற்றுவதற்கு திருச்சுழி வட்டாட்சியர் ஒப்பந்த அறிவிப் பாணை வெளியிட வில்லை. மாறாக தனி நபர்கள், கருவேல மரங்களை வெட்டி எடுத்து செல்ல அனுமதி வழங்கியுள்ளார். இதனால் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட வட்டாட்சியர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் கோரியிருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் ஆர். சுப்பிரமணியன், எல். விக்டோரியா கௌரி அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.
கொஞ்சம் இதையும் படிங்க : http://thenewscollect.com/the-madras-high-court-has-agreed-to-hear-the-petition-filed-by-assistant-commissioner-of-police-ilangovan-today-as-an-urgent-case/
அப்போது அரசு தரப்பில், உளுத்தி மடை பகுதியில் உள்ளகிருதுமால் ஆற்றில் அனுமதியின்றி கருவேல மரங்கள் வெட்டுவதாக வந்த புகாரின் பேரில், அந்த மரங்கள் வெட்டுவதை மாவட்ட நிர்வாகம் நிறுத்தி வைத்ததாக தெரிவிக்கப்பட்டது. இதனைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு , கிருதுமால் ஆற்றில் உள்ள கருவேல மரங்களை தனி நபர்கள் வெட்டி செல்ல அனுமதி வழங்கிய திருச்சுழி வட்டாட்சியர் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து மாவட்ட நிர்வாகம் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு, வழக்கை வருகிற 23 ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்தி வைத்தனர்.
Leave a Reply
You must be logged in to post a comment.