மூத்த குடிமக்கள் நல பராமரிப்பு சட்டம் 2009ன் படி தமிழகம் முழுவதும், மாவட்டம் தோறும் ஆதரவற்றோர் முதியோர் காப்பகம் அமைத்து பாதுகாக்கக் கோரிய வழக்கை முடித்து வைத்தது மதுரை அமர்வு.

1 Min Read
சென்னை உயர் நீதிமன்றம்
  • மூத்த குடிமக்கள் நல பராமரிப்பு சட்டம் 2009ன் படி தமிழகம் முழுவதும், மாவட்டம் தோறும் ஆதரவற்றோர் முதியோர் காப்பகம் அமைத்து பாதுகாக்கக் கோரிய வழக்கை முடித்து வைத்தது மதுரை அமர்வு.

தூத்துக்குடியை சேர்ந்த அதிசயகுமார், உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுவினைத் தாக்கல் செய்திருந்தார்.
அதில், “தமிழகத்தில் திருச்செந்தூர், ராமேஸ்வரம், மதுரை, கன்னியாகுமரி, வேளாங்கண்ணி பகுதியில் உள்ள கோவில் வளாகங்கள் பேருந்து நிலையங்களில் ஆதரவற்ற முதியவர்கள் பலர் ஆங்காங்கே நடைமேடை,
பேருந்து நிறுத்தம் உள்ளிட்ட பகுதிகளில் ஆதரவின்றி தங்கியுள்ளனர்.

- Advertisement -
Ad imageAd image

இவர்களை பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் நல பராமரிப்பு சட்டம் 2009ன் படி தமிழகம் முழுவதும் ஒவ்வொரு மாவட்டம் தோறும் ஆதரவற்றோர் முதியோர் காப்பகம் அமைத்து பாதுகாக்க உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும்” என கூறியிருந்தார்.

சென்னை உயர்நீதிமன்றம்

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சுப்பிரமணியன், விக்டோரியா கௌரி அமர்வு, ” சட்டப்படி மாவட்டத்தில் ஒரு முதியோர் இல்லமாவது அரசால் நடத்தப்பட வேண்டும். ஆனால் ஒரு இல்லம் கூட அரசால் நடத்தப்படவில்லை. தனியார் தொண்டு நிறுவனங்களால் நடத்தப்பட்டு வருகின்றன.இது விதிமீறும் செயல். ஏற்கத்தக்கதல்ல. ஆகவே அனைத்து மாவட்டங்களிலும் ஒரு முதியோர் இல்லத்தையாவது கட்டுங்கள் என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.

Share This Article

Leave a Reply