- தன் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க மாநில மனித உரிமைகள் ஆணையம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து போலீஸ் உதவி ஆணையர் இளங்கோவன் தாக்கல் செய்த மனுவை இன்றே அவசர வழக்காக விசாரிக்க சென்னை உயர் நீதிமன்றம் ஒப்புதல் தெரிவித்துள்ளது.
திருவொற்றியூர் சுற்றியுள்ள பகுதிகளில் போலீஸ் உதவி கமிஷனர் இளங்கோவன், தலைமையில் போலீசார், அங்கு வசிக்கும் சரித்திர பதிவேடு ரவுடிகளின் வீடுகளுக்கு சென்று, அவர்களின் குடும்பத்தினரை சந்தித்து , ஒழுக்கமாக இருக்க வேண்டும் இல்லை என்றால் என்கவுண்டர் செய்ய வாய்ப்புள்ளது என்று கூறிய காட்சிகள் யூடியூப் ஒன்றில் வெளியானது.

இந்த காட்சிகளின் அடிப்படையில், தானாக முன்வந்து வழக்காக எடுத்து, மனித உரிமைகள் ஆணைய தலைவர் நீதிபதி மணிக்குமார், உறுப்பினர் கண்ணதாசன்
அமர்வு விசாரணை நடத்தியது.அப்போது ஆஜரான உதவி ஆணையர் இளங்கோவன் ஆஜராகியிருந்தார். இதனையடுத்து, இளங்கோவன் துறை ரீதியான நடவடிக்கை எடுக்க அரசுக்கு உத்தரவிட்ட ஆணையம் இது தொடர்பாக அக்டோபர் 14ம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டது.

கொஞ்சம் இதையும் படிங்க : http://thenewscollect.com/the-madurai-bench-of-the-madras-high-court-has-dismissed-the-suit-filed-to-set-aside-the-order-issued-by-the-assistant-engineer-of-pudukottai-district-water-resources-department/
இதனை எதிர்த்து இளங்கோவன் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்படுள்ளது. மனுவை அவசர வழக்காக விசாரிக்க கோரி இளங்கோவன் சார்பில் முறையீடப்பட்டது. முறையீட்டை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் பி.பி.பாலாஜி, ஜி.அருள் முருகன் அமர்வு இன்றே விசாரிக்க ஒப்புதல் தெரிவித்துள்ளது.



Leave a Reply
You must be logged in to post a comment.