காதலி தற்கொலை செய்து கொண்ட விரக்தியில் இருந்த வாலிபர் தனது கை, கால்களை கட்டிக்கொண்டு கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
கடலூர் மாவட்டம், குள்ளஞ்சாவடி அருகே உள்ள கஞ்சமநாதன் பேட்டையை சேர்ந்தவர் ஜோதி. இவரது மகன் அசோக்குமார் வயது 26. இவர் ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். கடலூரில் உள்ள கடலூரில் படிக்கும் போது அவருக்கும் அந்த கல்லூரியில் அவருடன் படித்த ஒரு இளம் பெண்ணுக்கும் காதல் மோகம் ஏற்பட்டுள்ளது. கடந்த சில வருடங்களாக இருவரும் காதலித்து வந்த நிலையில் அந்த பெண்ணுக்கும் அவருடைய பெற்றோர் வேறொரு இடத்தில் மாப்பிள்ளை பார்த்து உள்ளனர்.

இதனால் மணமுடைந்த அந்த இளம் பெண், கடந்த மாதம் தனது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனால் அசோக்குமார் கடந்த சில வாரங்களாக மன உளைச்சலிலும், விரத்தியிலும் இருந்துள்ளார். இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை அசோக்குமார் தனது பெற்றோரிடம் வெளியே சென்று விட்டு வருவதாக கூறிவிட்டு சென்றுள்ளார். ஆனால் நீண்ட நேரம் ஆகியும் அவர் வீட்டுக்கு திரும்பவில்லை. இதனால் அவரது பெற்றோர் பல இடங்களில் தேடிப் பார்த்தனர். இந்த நிலையில் நேற்று அதிகாலை தம்பி பேட்டையில் உள்ள விளை நிலத்தில் உள்ள தரை கிணற்றில் அசோக்குமார் உயிரிழந்த நிலையில் கிடந்துள்ளார். நேற்று முன்தினம் மாலை வீட்டை விட்டு வெளியே சென்ற அவர் அந்த விளைநிலத்தில் தன்னுடைய இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு தனது கை, கால்களை தானே கயிற்றால் கட்டி கொண்டு அந்த தரை கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இது குறித்து தகவல் அறிந்த குள்ளஞ்சாவடி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து அசோக்குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
Leave a Reply
You must be logged in to post a comment.