- தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியின் ஆசிரியர் வகுப்பறையில் பாடம் நடத்திக் கொண்டிருந்த பொழுதே மயங்கி விழுந்து இறந்த சம்பவம் பரபரப்பு மற்றும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அச்சம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் செல்லத்துரை வயது (57). இவர் பட்டுக்கோட்டை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சமூக அறிவியல் பாடம் நடத்தும் ஆசிரியராக பணிபுரிந்து வந்தார்.
நேற்று மாலை மூன்று முப்பது மணி அளவில் பள்ளியில் உள்ள வகுப்பறையில் மாணவிகளுக்கு பாடம் நடத்திக் கொண்டிருந்தவர் திடீரென மயங்கி விழுந்துள்ளார்.அதனை தொடர்ந்து அருகில் உள்ளவர்கள், அவரை மீட்டு பட்டுக்கோட்டை அரசு மருத்துவ மணைக்கு சிகிச்சைக்காக கொண்டு வந்து கொண்டு வந்தனர்.
அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் இறந்துவிட்ட தகவலை தெரிவித்தனர்.இது குறித்து அவருடைய மகன் ராகேஷ் பட்டுகோட்டை நகர போலீஸில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
பள்ளி வளாகத்தில், பள்ளி வகுப்பறையில் பாடம் நடத்திக் கொண்டிருந்த ஆசிரியர், திடீரென மயங்கி விழுந்து இறந்த சம்பவம் மாணவ,மாணவிகள் ஆசிரியர்களிடம் மிகுந்த அதிர்ச்சி மற்றும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவரது உடலை பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் உடல் ஆய்வு செய்து வெளியில் வந்த பொழுது அவரிடம் பயின்ற மாணவிகள், உடன் பணியாற்றிய ஆசிரியர்கள் அவரது உடலுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அவரது உடலை பார்த்து மாணவிகள் கதறி அழுதது மிகவும் சோகத்திற்கு உள்ளாக்கியது. பின்னர் அவரது உடலை சொந்த ஊரான திருநெல்வேலிக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைக்கப்பட்டது.
Leave a Reply
You must be logged in to post a comment.