அந்நியச் செலாவணி விதிகளை மீறியதாகக் கூறப்படும் எட்-டெக் நிறுவனமான பைஜூஸ் நிறுவனத்திற்கு, இந்தியாவின் மத்திய நிதிக் குற்றங்களைத் தடுக்கும் முகமை, ஷோ-காஸ் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
அந்நியச் செலாவணி மேலாண்மைச் சட்டத்தின் (FEMA) கீழ் அந்த நிறுவனம் 90 பில்லியன் ரூபாய் ($1.1 பில்லியன்) மதிப்புள்ள , விதி மீறலில் அந்த நிறுவனம் (பைஜூஸ்) ஈடுபட்டுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது .
எனினும் அமலாக்க இயக்குநரகத்திடம் இருந்து நோட்டீஸ் வந்துள்ளதாகத் தெரிவிக்கும் ஊடகச் செய்திகளை பைஜூ சந்தேகத்திற்கு இடமின்றி மறுத்துள்ளது . “அமலாக்க இயக்குநரகத்திடம் இருந்து பைஜூஸ் நிறுவனம் அத்தகைய தகவல் எதையும் பெறவில்லை” என்று நிறுவனம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் பைஜூவின் நிறுவனர் பைஜு ரவீந்திரன் மற்றும் அதன் தாய் நிறுவனமான திங்க் அண்ட் லேர்ன் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்துக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டதாக தொடர்ந்து செய்திகள் வெளிவந்த நிலையிலுள்ளது .
ஏப்ரல் மாதத்தில் , அமலாக்க இயக்குனரகம் 2011 முதல் 2013 வரை 280 பில்லியன் ரூபாய் அந்நிய நேரடி முதலீட்டில் பெறப்பட்டதாகக் கூறப்படும் FEMA மீறல்கள் தொடர்பாக பைஜுவுடன் தொடர்புடைய மூன்று இடங்களில் சோதனை நடத்தியது. அந்த நேரத்தில் பைஜூஸ் – ன் , தலைமை நிர்வாக அதிகாரி ரவீந்திரன் நிறுவனம் அந்நியச் செலாவணி சட்டங்களுக்கு இணங்குவதை ஒரு உள் குறிப்பில் மீண்டும் கூறினார்.
முதலீட்டாளர்கள் அதன் மதிப்பீட்டைக் குறைப்பது மற்றும் அதன் தணிக்கையாளர் மற்றும் குழு உறுப்பினர்கள் வெளியேறுவது உள்ளிட்ட நிறுவனத்திற்கு தொடர்ச்சியான பின்னடைவுகளுக்கு மத்தியில் இந்த புகார்கள் வந்துள்ளன. கடந்த சில மாதங்களில் $1.2 பில்லியன் கடனை திருப்பிச் செலுத்துவது குறித்தும் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
ஜெனரல் அட்லாண்டிக், ப்ரோசஸ் மற்றும் பிளாக்ராக் போன்ற முதலீட்டாளர்களின் ஆதரவுடன், பைஜூஸ் தனது 2021-22 நிதியாண்டு முடிவுகளை ஒரு வருட கால தாமதத்திற்குப் பிறகு இந்த மாத தொடக்கத்தில் அறிவித்தது , குறிப்பிடத்தக்கது .
Leave a Reply
You must be logged in to post a comment.