மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே வைத்தீஸ்வரன்கோயில் அரசு மருத்துவமனை நிர்வாக சீர்கேட்டை கண்டித்து பாடைகட்டி நூதன போராட்டத்தில் ஈடுபட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் 100க்கும் மேற்பட்டோரை காவல் துறையினர் கைது செய்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்ப்படுத்தியது.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே வைத்தீஸ்வரன்கோயில் அரசு மருத்துவமனையில் போதுமான மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களை நியமிக்க வேண்டும், மருத்துவர்களை இரவு நேரங்களில் தங்கி பணி செய்து தர வேண்டும், மருத்துவமனைக்கு தேவையான அளவிற்கு உயிர் காக்கும் மருந்துகள் வழங்கிட வேண்டும், மருத்துவமனையில் சுகாதார முறையில் வைத்திருக்க வேண்டும் போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பல முறை அரசின் கவனத்தை பெரும் வகையில் அரசு அதிகாரிகளுக்கு மனு அளிக்கப்பட்டது.ஆனால் அரசு எதையும் கண்டுகொள்ளவில்லை.இதனால் பொது மக்களும், நோயாளிகளும் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.இந்த நிலையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் சீனிவாசன் தலைமையில் 100க்கும் மேற்பட்டோர் கோரிக்கையை வலியுருத்தும் வகையில் பாடைகட்டி வைத்தீஸ்வரன் கோயில் அரசு பொது மருத்துவமனைக்கு ஊர்வலமாக சென்று நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பின்னர் இதுகுறித்து சீர்காழி காவல் துணை கண்காணிப்பாளர் லாமேக்கு தகவல் தெறிவிக்கப்பட்டது. பாதுகாப்பு பணிக்காக ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். இந்த நிலையில் வைத்தீஸ்வரன்கோயில் அரசு மருத்துவமனை நிர்வாக சீர்கேட்டை கண்டித்து பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் சீனிவாசன் தலைமையில் 100க்கும் மேற்பட்டோர் பாடைகட்டி வைத்தீஸ்வரன் கோயில் அரசு பொது மருத்துவமனைக்கு ஊர்வலமாக நூதன முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட போது சம்பவ இடத்திற்க்கு விரைந்து வந்த சீர்காழி காவல் துணை கண்காணிப்பாளர் லாமேக் தலைமையான போலீசார் ஊர்வலமாக வந்தவர்களை வழிமறித்து பாடையை பிடுங்கி எரிந்து தடுத்து நிறுத்தினார்கள். இதனால் காவல்துறையினருக்கும் போராட்டக்காரர்களுக்கும் லேசான சலசலப்பு ஏற்பட்டது.

இந்த நிலையில் லேசான சலசலப்பு பின்பு காவல்துறையினருக்கும் போராட்டக்காரர்களுக்கும் தள்ளுமுள்ளாக மாறியது. பிறகு காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர்களை கைது செய்தனர்.கைது செய்யப்பட்ட போது தமிழக அரசுக்கு எதிராகவும்,தமிழக முதல்வருக்கு எதிராகவும் முழக்கங்களை எழுப்பினர். பின்னர் கைது செய்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர்களை வைத்தீஸ்வரன் கோயில் அருகே உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர்.
Leave a Reply
You must be logged in to post a comment.