ஈரோடு மாவட்டத்தில், டெட்ரா பேக் மது விற்பனை குறித்து தொடர்பாக விரைவில் அறிவிப்பு வெளியிடப்படும் என்று அமைச்சர் முத்துசாமி கூறினார். ஈரோட்டுக்கு வந்த முத்தமிழ் தேருக்கு வரவேற்பு அளித்த தமிழ்நாடு மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் சு. முத்துசாமி தேரில் உள்ள கருணாநிதியின் சிலைக்கு மாலை அணிவித்தார்.
அதன் பிறகு அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்த போது கூறியதாவது; தீபாவளி போன்ற பண்டிகையின் போது அனைத்து பொருட்களின் விற்பனையும் அதிகமாக காணப்படும். அதனை தொடர்ந்து, திட்டமிட்டு மது விற்பனை நடத்தப்படவில்லை. மது விற்பனை தடுப்பதும் கடினமான ஒன்று. சில பேர் மகிழ்ச்சிக்காக பலர் மது குடிக்கின்றனர். அதுபோல இருந்தாலும் மது குடிப்பதை குறைக்க வேண்டும் என்பது தான் தமிழக அரசின் நோக்கமாகும்.

இது தொடர்பாக ஒவ்வொரு மாவட்டங்களிலும் குழு வைத்து கவுன்சிலிங் கொடுத்து வருகிறோம். எனவே மது விற்பனையை அதிகரிக்க வேண்டும் என்ற எண்ணம் கிடையாது. மது குடிப்பது தவிர்க்க வேண்டும் என்பதை எங்களது வேண்டுகோள் ஆகும். டெட்ரா பேக் மது விற்பனை நடைமுறை மற்ற மாநிலங்களில் உள்ளது. அதில் சில நன்மைகளும் உள்ளன. மதுபான பாட்டில் பயன்பாடு குறைவதன் மூலமாக விவசாயிகளுக்கான பிரச்சினை தீரும்.
அது தொடர்பான ஆய்வு அறிக்கை பெறப்பட்டு உள்ளது. எனவே தமிழ்நாட்டில் டெட்ரா பேக் மது விற்பனை தொடர்பாக விரைவில் அறிவிப்பு வெளியிடப்படும். தமிழகத்தில் மது விற்பனை படிப்படியாக குறைக்க வேண்டும் என்றும், நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்திருந்தார். அதன்படி 500- க்கும் மேற்பட்ட மதுக்கடைகள் மூடப்பட்டுள்ளன. ஒரே நாளில் மது பாட்டில் குடிக்கும் பழக்கத்தை மாற்றி விட முடியாது. அதனை மாற பல நடவடிக்கைகளை புதிதாக செய்து வருகிறோம்.

அப்போது வெற்றி பெறும் போது பிரச்சினை முடிவுக்கு வரும். விதிமுறையை மீறி, மது விற்பனை செய்யப்படுவதில்லை என்று குறிப்பிடதக்கது. அது தொடர்பான புகார் தெரிவித்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அமைச்சர் சு. முத்துசாமி கூறினார்.
Leave a Reply
You must be logged in to post a comment.