தமிழகத்தில் உள்ள அரசுக் கல்லூரிகளில் உள்ள அனைத்து எம்பிபிஎஸ் இடங்களும் சிறப்புத் தேர்வின் போது நிரப்பப்பட்டன, அதே சமயம் சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் உள்ள 18 இடங்களில் 6 இடங்கள் ஒதுக்கப்பட்ட மாணவர்கள் தேர்வு செய்யாததால் இன்னும் காலியாகவே உள்ளது.
இந்த ஆண்டு 1000க்கும் மேற்பட்ட இளங்கலை மருத்துவ இடங்கள் காலியாக உள்ளதால், சுகாதார சேவைகள் பொது இயக்குநரகத்துடன் இணைக்கப்பட்ட மருத்துவ ஆலோசனைக் குழு, உச்ச நீதிமன்றத்தின் அனுமதியுடன் கவுன்சிலிங்கை நீட்டித்தது.
இந்நிலையில் அகில இந்திய அளவில் எம்பிபிஎஸ் சேர்க்கைகாகன பொறுப்பாளர்களான மருத்துவ ஆலோசனைக் குழு, , மத்திய நிறுவனங்கள் மற்றும் நிகர்நிலைப் பல்கலைகலைக்கழகங்கள் , அரசு மருத்துவக் கல்லூரிகளில் 16 எம்பிபிஎஸ் இடங்களுக்கும், மதுரை எய்ம்ஸில் 3 இடங்களுக்கும், நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் கிட்டத்தட்ட 50 இடங்களுக்கும் கவுன்சிலிங்கை நடத்தியது.
தற்போது வரை மாநில மருத்துவக் கல்வி இயக்குனரகத்திடம் நிகர்நிலைப் பல்கலைக்கழங்கல்களில் இருக்க கூடிய காலி இடங்கள் குறித்த தகவல்கள் இல்லை என்று தெரிவித்தபோதும் அரசு மருத்துவக் கல்லூரிகளில் இடம் ஒதுக்கப்பட்ட அனைத்து மாணவர்களும் படிப்பில் சேர்ந்துள்ளனர் என்று தெரிவித்துள்ளது . இந்த ஆண்டு அரசு கல்லூரிகளில் எங்களிடம் எம்பிபிஎஸ் சேர்க்கைக்கான காலி இடங்கள் இல்லை என்று அதிகாரி ஒருவர் அதிகாரபூர்வமாக தெரிவித்தார் .
இருப்பினும் சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் உள்ள 18 இடங்களில் ஆறு இடங்களுக்கு மாநில தேர்தல் குழுவின் கவுன்சிலிங் காலியாக உள்ளது . இதன் விளைவாக, இந்திரா மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனைகளில் மூன்று இடங்களும், நந்தா மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனைகள், திருச்சி, எஸ்ஆர்எம் மருத்துவக் கல்லூரி மற்றும் ஸ்ரீ முத்துக்குமரன் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனைகளில் தலா ஒரு இடங்களும் இன்னும் காலியாக உள்ளன.
இந்த காலியிடங்கள் குறித்து பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் கவலை தெரிவித்துள்ளனர் . அகில இந்திய ஒதுக்கீட்டில் இடங்கள் நிரம்பியதற்கு ஒரு காரணம், மத்திய கவுன்சிலிங் கமிட்டி மாணவர்களுக்கு ஒதுக்கப்பட்ட இருக்கைகளை எடுக்காவிட்டால் ஓராண்டுக்கு மாணவர்களை விலக்கி வைப்பதாக அச்சுறுத்தியதே முக்கிய காரணம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
அந்த ஷரத்து அரசிடம் இல்லை . இருக்கைகளை தேர்வு செய்த மாணவர்களுக்கு இருக்கைகள் வழங்கப்பட்டும் , அவர்கள் எடுக்கவில்லை .இந்த இருக்கைகள் வீணாகி விடும் என்கிறார் பெற்றோர் ஒருவர்
Leave a Reply
You must be logged in to post a comment.