- முருகன் கடவுளின் அறுபடை வீடு கோவில்களில் நான்காம் படைவீடு கோவிலான கும்பகோணம் அருகில் உள்ள சுவாமிமலை சுவாமிநாத சுவாமி ஆலயத்தில் இன்று இரவு நடைபெற்ற சூரசம்ஹார நிகழ்வில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு.
முருக கடவுளின் அறுபடை வீடு கோவில்களில் நான்காம் படை வீடு கோவிலாக விளங்கும் கும்பகோணம் அருகில் உள்ள சுவாமிமலை சுவாமிநாத சுவாமி ஆலயத்தில் நடைபெறும் முக்கிய விழாக்களில் ஒன்றான கந்த சஷ்டி விழா கடந்த 2ம் தேதி தொடங்கியது .இவ்விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்கார விழா இன்று இரவு நடைபெற்றது.

சூரனை வதம் செய்ய தாய் பார்வதி தேவியிடம் இருந்து வேல் வாங்கும் நிகழ்வு நடைபெற்றது. இந்த நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.இதில் பரமசிவன், பார்வதி ,விநாயகர், முருகன்,வீரபாகு, வேடமணிந்த பக்தர்கள் கலந்து கொண்டனர்.
இதனைத் தொடர்ந்து முருக கடவுள் சூரனை வதம் செய்யும் நிகழ்வு சுவாமிமலை கீழ வீதியில் நடைபெற்றது.இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். சூரசம்கார நிகழ்வில் கண்ணை கவரும் வான வேடிக்கைகள் நடைபெற்றது.
சூரசம்ஹாரதின் வரலாறு : சூரசம்ஹாரம் என்பது சூரபத்மன் எனும் அரக்கனை அழித்த நிகழ்வாகும். சூரபத்மனை முருகன் அழித்தார். அதன் நினைவாக முருகனுடைய ஆலயங்களில் இந்த நிகழ்வினை விழாவாக கொண்டாடுகிறார்கள்.
காசியப்ப முனிவருக்கும் மாயை என்பவளுக்கும் பிறந்தவர் சூரபத்மன். அவன் வளர்ந்த பிறகு சிவபெருமானை நோக்கி தவமிருந்து இந்திர ஞாலம் எனும் தேரையும், பெண்ணால் பிறக்காத குழந்தையால் மட்டுமே மரணம் என்ற வரத்தையும் பெற்றான். பெற்ற வரத்தால் சக்திகள் மிக்கவனாக தேவர்களையும், நல்லுயிர்களையும் துன்புறுத்தினான். சிவபெருமானின் ஆறு முகங்களிலிருந்து பிறந்த ஆறு நெருப்புப் பொறிகள் வந்தன. அதனை வாயுபகவான் சரவணப் பொய்கையில் சேர்த்தார். அவை ஆறு குழந்தைகளாக கார்த்திகைப் பெண்டிரிடம் வளர்ந்தன. பார்வதி அவர்கள் ஆறு பேரையும் தழுவும் போது அவர்கள் சண்முகனாக ஆனார்கள். பின்பு பார்வதியிடம் வேலைப் பெற்ற முருகன் சூரபத்மனை போரில் அழித்தான்.இந்த போரில் வீரபாகு உள்ளிட்ட நவவீரர்கள் முருகனுக்கு படைத்தளபதிகளாக இருந்தனர்.

கொஞ்சம் இதையும் படிங்க : http://thenewscollect.com/thanjavur-district-unidentified-male-body-recovered-near-antipatti-footbridge/



Leave a Reply
You must be logged in to post a comment.