திருநெல்வேலியில் தெரு நாய்கள் அட்டகாசம், மாநகராட்சியை கண்டித்து நூதன போஸ்டர்..!

2 Min Read

தெரு நாய்கள் ஆண்களை மட்டும் குறி வைத்து கடிக்கும் நாய்கள் எனவும், நெல்லையில் நாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த தவறிய மாநகராட்சியை கண்டித்து சமூக ஆர்வலர் நகைச்சுவையுடன் ஒட்டியுள்ள போஸ்டர்கள் வைரலாகி வருகிறது.

- Advertisement -
Ad imageAd image

செல்லப் பிராணிகள் மனிதனின் வாழ்வியலோடு ஒன்றிய உயிரினங்கள் என்பதால் பெரும்பாலானோர் தங்கள் வீடுகளில் நாய், பூனை, முயல், கிளி போன்றவற்றை வளர்த்து வருவார்கள். ஆனால் அதே செல்லப் பிராணிகள் மனித உயிர்களுக்கு சில நேரங்களில் ஆபத்து ஏற்படும் விளைவிப்பதாக மாறிவிடுகிறது. அந்த வகையில் தமிழ்நாடு முழுவதும் சாலைகளில் சுற்றித்திரியும் நாய்கள் சில நேரங்களில் வெறிப்பிடித்து சாலையில் மனிதர்களை கொலை வெறியோடு தாக்குவதால் பலர் நாய் கடிபட்டு பெரும் இன்னல்களுக்கு ஆளாகின்றனர். எனவே சாலைகள் தெருக்களில் நாய்களின் நடமாட்டத்தை கட்டுப்படுத்த வேண்டும் என தொடர்ந்து மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

மனிதர்களை கடிக்கும் தெரு நாய்கள்

அந்த வகையில் திருநெல்வேலி மாநகரப் பகுதியில் நாய்கள் தொல்லை கடந்த சில மாதங்களாக அதிகரித்து காணப்படுகிறது. குறிப்பாக மேலப்பாளையம் டவுன், பாளையங்கோட்டை போன்ற பகுதிகளில் நாய்கள் தொல்லையால் மக்கள் நாள்தோறும் பெரும் அவதிப்பட்டு வருகின்றனர். மாநகராட்சி சார்பில் அவ்வப்போது பெயரளவுக்கு மட்டும் நாய் பிடிக்கும் வண்டியை வைத்து தெரு நாய்களை பிடித்து சொல்கின்றனர். அந்த வகையில் திருநெல்வேலி மாநகரப் பகுதியில் நாய்கள் தொல்லை கடந்த சில மாதங்களாக அதிகரித்து காணப்படுகிறது. குறிப்பாக மேலப்பாளையம் டவுன், பாளையங்கோட்டை போன்ற பகுதிகளில் நாய்கள் தொல்லையால் மக்கள் நாள்தோறும் பெரும் அவதிப்பட்டு வருகின்றனர்.

மாநகராட்சி சார்பில் அவ்வப்போது பெயரளவுக்கு மட்டும் நாய் பிடிக்கும் வண்டியை வைத்து தெரு நாய்களை பிடித்து சொல்கின்றனர். குறிப்பாக புண்ணியமூர்த்தி களத்தூர் தட்சிணாமூர்த்தி வழுவக்குடி சுந்தரமூர்த்தி மேலக்குடி ராமமூர்த்தி என்று நாய்களுக்கு கலக்கலான பெயர்களை சூட்டியுள்ளார். மேலும் அதன் குணங்களாக சண்டைய இழுத்தல் கடித்து வைத்தல் ஆண்களை மட்டும் குறி வைத்து விரட்டுதல் சங்கத் தலைவனாக பாவித்தல் பதுங்கி இருந்து விரட்டுதல் என குறிப்பிட்டு கடிபட்டவர்கள் எண்ணிக்கையும் முன்னிலைப்படுத்தியுள்ளார்.

மனிதர்களை கடிக்கும் தெரு நாய்கள்

சமூக ஆர்வலர் ஒட்டியுள்ள இந்த போஸ்டர் அப்பகுதியை கடந்து செல்லும் மக்களிடம் ஒருவகையில் சிரிப்பலையை ஏற்படுத்தினாலும் நாய்களின் நடமாட்டத்தை கட்டுப்படுத்த தவறிய மாநகராட்சி அதிகாரிகளுக்கு பாடம் புகட்டும் ஒருவித நூதன போராட்டமாகவே இச்சம்பவம் எதிர் பார்க்கப்படுகிறது.

Share This Article

Leave a Reply