இடஒதுக்கீடு குறித்து விஜய் டிவி நிகழ்ச்சியில் பேச்சு – முதல்வர் பாராட்டு.!

1 Min Read
முதல்வர் மு க ஸ்டாலின்

- Advertisement -
Ad imageAd image

இடஒதுக்கீடு குறித்து விஜய் டிவியில் நடந்த தமிழ் பேச்சு எங்கள் மூச்சு நிகழ்ச்சியில் பேசிய பெண்ணிற்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் தனது ட்விட்டர் பதிவில்,”சொற்களுக்கு உயிர் இருக்கிறது. இனமான – பகுத்தறிவு உணர்ச்சியைத் தட்டியெழுப்பும் வல்லமை கொண்டது பேச்சுக்கலை. அதனால்தான் #தமிழ்ப்பேச்சு_எங்கள்மூச்சு நிகழ்ச்சியை விஜய் டிவி தொடங்கும்போது, “பேச்சுக்கலை என்பது பழைய மூடநம்பிக்கைகளைப் பாடி, பிற்போக்குத்தனத்தைப் போற்றுவதற்குப் பயன்படக் கூடாது. நகைச்சுவை என்ற பெயரில் அடுத்தவரை மட்டம் தட்டுவதாக இருக்கக் கூடாது. பகுத்தறிவையும், அறவுணர்வையும் வளர்த்து, முற்போக்கான சமூகத்துக்கு வழிவகுப்பதுதான் சிறந்த பேச்சுக்கு இலக்கணம்! பயனற்றவற்றைத் தவிர்த்து, பகுத்தறிவை வளர்க்கும் நோக்கத்தை இந்த நிகழ்ச்சி பின்பற்றும் என்று நான் மனதார நம்புகிறேன்” என வாழ்த்தினேன்.

எனது நம்பிக்கையை மேலும் அதிகரிக்கும் வகையில் “இடஒதுக்கீடு எனது உரிமை” என்ற தலைப்பில் உரையாற்றிய திருமிகு தே.நர்மதா அவர்களின் உரை அமைந்திருந்தது. கருத்து செறிந்த அவரது உரை வீச்சில் நூற்றாண்டுகால இடைவெளியைச் சுட்டிக்காட்டிய அவரது சொற்களுக்கு உயிர் இருக்கிறது. என் திருவாரூர் மண் ஈன்றெடுத்த அவரை வாழ்த்துகிறேன்! அனைவரும் சொல்வோம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Share This Article

Leave a Reply