நியூசிலாந்தின் நடுவர் மன்றம் புதன்கிழமையன்று தென்னாப்பிரிக்க பெண் ஒருவரை தனது மூன்று இளம் மகள்களைக் கொன்றதாக ஒரு மாத கால விசாரணைக்குப் பிறகு குற்றவாளி என அறிவித்துள்ளது.
42 வயதான லாரன் ஆனி டிக்சன், தனது இரண்டு வயது இரட்டைக் குழந்தைகளையும் அவர்களது ஆறு வயது சகோதரியையும் 2021 செப்டம்பரில், தெற்கு தீவில் உள்ள திமாருவில் உள்ள அவர்களது வீட்டில் கழுத்தை நெரித்து கொலைசெய்துள்ளார் . சம்பவத்தின் போது , சிறுமிகளின் தந்தை சக ஊழியர்களுடன் இரவு உணவிற்கு சென்றுள்ளார்.

சிறுமிகளைக் கொன்றதை அவர் ஒப்புக்கொண்டாலும், அவர் கடுமையான மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாக அவரது வழக்கறிஞர் வாதிட்டார். மேலும், தான் மன உளைச்சலுக்கு ஆளானதாகவும், அப்போது தான் என்ன செய்து செய்துகொண்டிருந்தேன் என்று தெரியவில்லை என்றும் கூறியுள்ளார்.
நியூசிலாந்தில் மூன்று மகள்களைக் கொன்ற தென்னாப்பிரிக்க பெண் குற்றவாளி …
விசாரணையின் போது, டிக்காசனின் வழக்கறிஞர் கெரின் பீட்டன் கேசி, குற்றம்சாட்டப்பட்ட டிக்காசனின் கடுமையான மனச்சோர்வை விளக்கினார், ”தாய்மார்கள் தங்கள் குழந்தைகளை பராமரிக்கும்போது கோபம், வெறுப்பு, மன அழுத்தம் அல்லது பதட்டம் போன்ற காரணங்களால் சில சமயங்களில் உணர்ச்சிவசப்பட்ட தன்னிலையை மறந்து விடுகின்றனர் . எனவே சிறுமிகளின் மரணத்திற்கும் கோபத்திற்கும் வெறுப்பிற்கும் எந்த தொடர்பும் இல்லை, மேலும் கடுமையான மனநோய் என்பது தெளிவாகிறது.

வழக்கறிஞர்கள் டிக்காசன் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டதாக ஒப்புக்கொண்டாலும், மருத்துவப் பாதுகாப்புக்கு உத்தரவாதம் அளிக்க இது போதாது என்று கூறினார். மேலும், அவரது ஆன்லைன் தேடல் வரலாற்றில் அவரது குழந்தைகளைக் கொலை செய்ய கூகுளை பயன்படுத்தியுள்ளார் .
டிக்காசனின் மனநலம் மற்றும் கருவுறுதல் பிரச்சினைகள் பற்றிய வரலாற்றை ஆராய்ந்த பிறகு, நடுவர் மன்றத்தின் பெரும்பான்மையானவர்கள், மூன்று கொலைக் குற்றச்சாட்டுகளுக்கும் தாயை குற்றவாளியாகக் கண்டறிந்தனர்.

தீர்ப்புக்குப் பிறகு, டிடெக்டிவ் இன்ஸ்பெக்டர் ஸ்காட் ஆண்டர்சன் ஒரு அறிக்கையில், “இறந்துபோன லியான், மாயா மற்றும் கர்லா குடும்பங்களுக்கு போலீசார் தங்கள் அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கிறேன் .
நீதிபதி, கேமரூன் மாண்டர், டிக்காசனை மருத்துவமனை மனநலப் பிரிவு சிறையில் அடைக்குமாறு தீர்ப்பளித்தார்.
Leave a Reply
You must be logged in to post a comment.