ஸ்ரீ. வில்லிபுத்தூர் தை அமாவாசையை முன்னிட்டு பக்தர்கள் சதுரகிரியில் சாமி தரிசனம்..!

2 Min Read

ஸ்ரீ. வில்லிபுத்தூர் தை அமாவாசையை முன்னிட்டு பக்தர்கள் சதுரகிரியில் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். அங்கு சாமி தரிசனம் செய்ய ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.

- Advertisement -
Ad imageAd image

விருதுநகர் மாவட்டம், அடுத்த ஸ்ரீ. வில்லிபுத்தூர் அருகே உள்ள சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில் தை அமாவாசையை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். ஸ்ரீ. வில்லிபுத்தூர் அருகே மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ளது சதுரகிரி சுந்தர மகாலிங்கம் திருக்கோவில்.

ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு

அப்போது கடல் மட்டத்திலிருந்து சுமார் 4,500 அடி உயரத்தில் அமைந்துள்ள இந்த கோவிலில் சுந்தரமகாலிங்கம் சுயம்பு வடிவாக காட்சி தருகிறார். அப்போது மிகவும் பிரசித்தி பெற்ற இந்த கோவிலில் மக்களின் பாதுகாப்பு காரணங்களுக்காக மாதம் தோறும் 4 நாட்கள் மட்டும் சாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்படுகிறது.

ஸ்ரீ. வில்லிபுத்தூர் தை அமாவாசையை முன்னிட்டு பக்தர்கள் சதுரகிரியில் சாமி தரிசனம்

இந்த நிலையில் கடந்த 7 ஆம் தேதி முதல் பிரதோஷம் தை அமாவாசை உள்ளிட்ட நாட்களுக்காக 10 ஆம் தேதி வரை 4 நாட்கள் பக்தர்கள் மலையேறி சாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்ட நிலையில் இன்று தை அமாவாசை தினத்தை முன்னிட்டு தமிழகம் முழுவதிலும் இருந்து ஏராளமான பக்தர்கள் சதுரகிரி மலைப்பகுதியின் அடிவாரப் பகுதியான தாணிப்பாறையில் குவித்தனர்.

ஸ்ரீ. வில்லிபுத்தூர் தை அமாவாசையை முன்னிட்டு பக்தர்கள் சதுரகிரியில் சாமி தரிசனம்

அப்போது காலை 6 மணிக்கு பக்தர்கள் மலை ஏற அனுமதிக்கப்பட்டனர். அப்போது மலையேறும் பக்தர்களிடமிருந்து பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்த வனத்துறையினர் மாஸ்க் அணிந்து செல்ல வலியுறுத்தினர். மேலும் பிற்பகல் 12 மணி வரை மட்டுமே பக்தர்கள் மலை ஏற அனுமதிக்கப்படுவர்.

ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு

மேலும் மலைக் கோவிலில் பக்தர்கள் தங்குவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால் சாமி தரிசனம் செய்த உடன் மலையிலிருந்து இறங்க பக்தர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. மேலும் மலைப்பாதை வழியாக கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் நீரோடைகளில் குளிக்க அனுமதி இல்லை என்றும் அறிவிக்கப்பட்டது.

Share This Article

Leave a Reply