பிரதமர் மோடி நாளை வருகை. 22 ஆயிரம் போலீசார் குவிப்பு சென்னையில் 5 அடுக்கு பாதுகாப்பு.

2 Min Read
நரேந்திர மோடி

நாளை சனிக்கிழமை பிரதமர் நரேந்திர மோடி சுற்றுப்பயணம் செய்யவிருக்கிறார். சென்னையில் ஐந்தடுக்கு போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் 22 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள் என்று  தெரிவிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -
Ad imageAd image


பாரதப் பிரதமர்நரேந்திர மோடி நாளை சென்னையில் மின்னல் வேக சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறார். முதலில் அவர் விமான நிலையத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த டெர்மினல் கட்டிடத்தை திறந்து வைக்கிறார். பின்னர் அவர் ஹெலிகாப்டரில் போர் நினைவு சின்னம் அறிய உள்ள அடையாறு ஐ என் எஸ் கடற்படை தளம் வருகிறார்.

சங்கர் ஜிவால் 


அங்கிருந்து கார் மூலம் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் செல்லுகிறார். அங்கு அவர் சென்னை கோவை வந்தே பாரத் ரயில் சேவையை கொடி அசைத்து தொடங்கி வைக்கிறார்.
அதைத்தொடர்ந்து அங்கிருந்து கார் மூலமாக மெரினா கடற்கரை காமராஜர் சாலையில் அமைந்துள்ள விவேகானந்தர் இல்லம் சென்று ராமகிருஷ்ணா மடம் சம்பந்தப்பட்ட நிகழ்வுகளில் கலந்து கொள்கிறார்.

இதையடுத்து பல்லாவரம் அல்ஸ்டாம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் நிகழ்ச்சிகள் கலந்து கொண்டு பல்வேறு வளர்ச்சி திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.

போலீஸ்

பிரதமரின் இந்த நிகழ்ச்சிக்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டதாக போலீஸ் கமிஷனர் சங்கர்ஜிவில் தெரிவித்துள்ளார். சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகளை டிஜிபி சைலேந்திரபாபு நேரில் சென்று பார்வையிட்டு முக்கிய ஆலோசனைகள் வழங்கினார்.
பிரதமர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகளில் ஐந்தடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்படுகிறது.

அவர் செல்லும் இடங்களில் வழிநெடுகளும் போலீஸ் பாதுகாப்புக்காக நிறுத்தப்படுகிறார்கள்.
இதற்காக 22 ஆயிரம் போலீசார் சென்னையில் குவிக்கப்படுகிறார்கள். போலீஸ் கமிஷனர் சங்கர்ஜிவால் தலைமையில் அனைத்து கூடுதல் கமிஷனர்கள், இணை கமிஷனர்கள், துணை கமிஷனர்கள், உதவி கமிஷனர்கள், மற்றும் இன்ஸ்பெக்டர்கள், ஆயுதப்படை, சிறப்பு காவல் படை போலீசார், கமாண்டோ படையினர் என போலீஸ் பட்டாளமே பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகிறார்கள்.

ட்ரோன் 


வாகன சோதனை மற்றும் போலீஸ் ரோந்தும் நேற்று இரவு முதல் தீவிரமாக்கப்பட்டது. சென்னையில் பிரதமர் கலந்து கொள்ளும் இடங்களில் சுற்றுவட்டார பகுதிகளில் போலீஸ் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.
அந்த பகுதிகளில் உள்ள தங்கும் விடுதிகள், மற்றும் நட்சத்திர ஓட்டல்கள் இதர வீடுகளில் சந்தேக நபர்கள் யாராவது தங்கி இருக்கிறார்களா? என்று போலீசார் நேற்றிரவிலிருந்தே சோதனை மேற்கொண்டு வருகிறார்கள்.


144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு ட்ரோன்கள் மற்றும் இதர ஆளில்லா வான்வெளி வாகனங்கள்  சென்னையில் நாளை அனுமதி மறுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Share This Article

Leave a Reply