திமுக இளைஞரணி சார்பில் பொள்ளாச்சியில் ரேக்ளா போட்டி..!

2 Min Read

பொள்ளாச்சியில் திமுக இளைஞரணி மாநாட்டை முன்னிட்டு கோவை தெற்கு மாவட்ட திமுக சார்பில் 300 காளைகள் பங்கேற்ற மாபெரும் ரேக்ளா போட்டி. பொள்ளாச்சி அடுத்த சி. கோபாலபுரம் பகுதியில் நடைபெற்றது.

- Advertisement -
Ad imageAd image

திமுக இளைஞரணி மாநாடு சேலத்தில் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு கோவை தெற்கு மாவட்ட திமுக சார்பில் 300 காளைகள் பங்கேற்ற மாபெரும் ரேக்ளா போட்டி பொள்ளாச்சி அடுத்த சி. கோபாலபுரம் பகுதியில் நடைபெற்றது. இதில் கோவை, ஈரோடு, திருப்பூர் மற்றும் கேரளாவைச் சேர்ந்த ஏராளமான மாட்டு வண்டி வீரர்கள் கலந்து கொண்டனர்.

திமுக இளைஞரணி சார்பில் பொள்ளாச்சியில் ரேக்ளா போட்டி

சிறுவர்களுக்கான ஓட்டப்பந்தயம் ஆண்களுக்கான சைக்கிள் பந்தயம், பெண்களுக்கான சைக்கிள் பந்தயம், நீச்சல் போட்டி தொடர் ஓட்டப் பந்தயம் என பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த போட்டியில் 200 மீட்டர் மற்றும் 300 மீட்டர் என போட்டிகள் நடைபெற்றது. இதில் கோவை தெற்கு மாவட்ட செயலாளர் தளபதி முருகேசன் கலந்து கொண்டு முதலாவதாக வண்டி ஓட்டினார். திமுக மாநில தகவல் தொழில்நுட்ப அணி இணை செயலாளர் மகேந்திரன் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

ரேக்ளா போட்டி

இந்த போட்டியில் கலந்து கொண்ட காளைகள் சீறி பாய்த்தது. பார்பவர்களை மிரள செய்தது. மேலும் இந்த போட்டிகளில் குதிரை ரேக்ளா பந்தயம் மூன்று சுற்றுகளாக நடைபெறும். இதில் கட்டை குதிரை, நடுக்குதிரை, பெரிய குதிரை என குதிரைகளின் ரகம் பிரித்து போட்டிகள் நடைபெறுவது வழக்கம். அந்த போட்டியை காண வந்த சுற்றுவட்டாரத்தில் இருந்து ஏராளமான பொதுமக்கள், இளைஞர்கள் ஆர்வத்துடன் வந்திருந்தனர். இந்த மாபெரும் ரேக்ளா போட்டி கண்டு மகிழ்ச்சி அடைத்தனர்.

ரேக்ளா போட்டி

கோவை தெற்கு மாவட்ட பொருளாளரும் சீ. கோபாலபுரம் ஊராட்சி மன்ற தலைவர் ஜெயப்பிரகாஷ், மெடிக்கல் பரமசிவம் திமுக சுற்றுச்சூழல் அணியின் நிர்வாகிகள் மற்றும் தமிழ் கலாச்சார அறக்கட்டளை நிர்வாகிகள் ஏற்பாடு செய்திருந்தனர். இந்த போட்டியில் வெற்றி பெற்ற காளை உரிமையாளர்களுக்கு முதல் பரிசு ரூபாய் 50 ஆயிரம், இரண்டாம் பரிசு ரூபாய் 40 ஆயிரம், மூன்றாம் பரிசு ரூபாய் 30 ஆயிரம் மற்றும் தங்க நாணயங்கள் வழங்கப்பட்டன.

Share This Article

Leave a Reply