மாவட்டத்திலுள்ள அணைத்து துறை அரசு அதிகாரிகளும் பொதுமக்களின் கோரிக்கைகள் மீது 30 நாட்களில் பதில் அளிக்க வேண்டும் என்று தமிழக பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் உத்தரவு உத்தரவிட்டார் .
கன்னியாகுமரி மாவட்டம் பேச்சிப்பாறை ஊராட்சிக்குட்பட்ட ராஜா திருமண மண்டபத்தில் நடைபெற்ற மக்களுடன் முதல்வர் முகாமில் பால்வளத்துறை அமைச்சர் .
மனோ தங்கராஜ் கலந்து கொண்டு, பொதுமக்களின் பல்வேறு கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டு பேசுகையில் கூறியதாவது … தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் பொதுமக்களின் நலன் கருதி, தமிழ்நாட்டுக்குட்பட்ட அனைத்து மாவட்டங்களிலும் உள்ள பொதுமக்களின் கோரிக்கைகளுக்கு மிகுந்த முக்கியத்துவம் அளிக்கும் பொருட்டு, மக்களுடன் முதல்வர் என்ற புதிய திட்டத்தினை துவக்கி வைத்தார்.

இத்திட்டத்தின் முக்கிய நோக்கம் கூலித்தொழில் செய்யும் ஏழை எளிய மக்களின் வசதிக்குகேற்ப அவர்களின் பகுதிகளுக்கு அருகாமையிலேயே தங்கள் குறைகளையும். கோரிக்கைகளையும், தேவைகளையும் பூர்த்தி செய்யும் வகையில் அவர்கள் நலத்திட்ட உதவிகள் பெறுவதற்கான விண்ணப்பங்கள் பூர்த்தி செய்து வழங்குவதற்கு ஏற்ற வகையில் மக்களுடன் முதல்வர் திட்டம் வழிவகை செய்கிறது.
அன்றாடம் பொதுமக்கள் அதிகமாக அணுகும் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை, ஊரக வளர்ச்சி துறை.சமூகநலத்துறை, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை, மாற்றுத்திறனாளி நலத்துறை, மகளிர் உரிமைத்துறை உள்ளிட்ட 15 அரசு துறைகளை சார்ந்த 44 சேவைகள் தொடர்பான கோரிக்கை மனுக்கள் பெறப்படுகின்றன. அதன் ஒருபகுதியாக இன்று பேச்சிப்பாறை ஊராட்சிக்குட்பட்ட ராஜா திருமண மண்டபத்தில் நடைபெற்று கொண்டிருக்கும் மக்களுடன் முதல்வர் முகாமில் பொதுமக்களின் கோரிக்கை மனுக்கள் எந்த எந்த துறைகளை சார்ந்தது என சரிபார்க்கப்பட்டு, கோரிக்கை மனுக்களை உரிய துறையில் வழங்கிட வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இம்முகாமில் கலந்து கொள்ளும் பொதுமக்கள் தங்கள் சந்தேகங்களை துறை சார்ந்த அலுவலர்களிடம் கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும். இம்முகாமில் கலந்து கொண்டுள்ள அலுவலர்கள். பணியாளர்கள் பொதுமக்களின் கோரிக்கைகள், ஐயப்பாடுகள், பிரச்சனைகளை கனிவுடன் கேட்டறிந்து, அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்து கொடுக்க வேண்டும். மேலும் முகாம்களில் பெறப்படும் அனைத்து விண்ணபங்களிலும் உரிய ஆவணங்கள் இணைத்து இருப்பதை சரிபார்த்து தகுதியான விண்ணப்பங்களுக்கு 30 தினங்களுக்குள் பதில் அளிக்க வேண்டும். பதில் கிடைக்க பெறாத பொதுமக்கள் தங்களை நாடி வந்து கேட்கும் போது தகுந்த பதில்களை அவர்களுக்கு வழங்குவதோடு, அவர்களுக்கு தேவையான வழிகாட்டுதல்களை வழங்க வேண்டும். இவ்வாறு பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் கூறினார்
நடைபெற்ற நிகழ்ச்சியில் திட்ட இயக்குநர் ஊரக வளர்ச்சி முகமை .பாபு, பத்மநாபபுரம் வருவாய் கோட்டாட்சியர் .தமிழரசி, திருவட்டார் ஒன்றியகுழு தலைவர் ஜெகநாதன், பேச்சிப்பாறை ஊராட்சி தலைவர் .தேவதாஸ். அனைத்து துறை அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் பணியாளர்கள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.
Leave a Reply
You must be logged in to post a comment.