பெருந்துறை அருகே வீட்டில் பதுங்கி இருந்த 5 ரவுடிகள் மீது போலிசார் துப்பாக்கிச்சூடு..!

2 Min Read

திருநெல்வேலி மாவட்டம் களக்காடு பகுதியில் நடந்த கொலை வழக்கில் தொடர்புடைய ரவுடி சிவசுப்பு என்பவர் உள்ளிட்ட 5 பேர் ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே உள்ள குள்ளம்பாளையம் என்ற இடத்தில் பதுங்கி இருந்துள்ளனர். ஈரோடு மாவட்டம், பெருந்துறை அடுத்துள்ள குள்ளம்பாளையத்தில் உள்ள ஒரு வீட்டில் பதுங்கியிருந்த 5 ரவுடிகள் மீது போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தி பிடிக்க முயற்சித்தனர். அதில் ரவுடிகள் 2 பேர் காயத்துடன் சிக்கினர்.

- Advertisement -
Ad imageAd image

ஈரோடு மாவட்டம், அடுத்த நெல்லை பகுதியை சேர்ந்தவர் சிவசுப்பு என்ற சுப்பிரமணி வயது (26). இவர் மீது, கொலை, கொள்ளை, கடத்தல் போன்ற அரசாங்கத்துக்கு சட்ட விரோதமாக ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகள் பயன்படுத்துதல் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. அவர் தொடர்ந்து தலைமறைவாக இருந்து வந்த ரவுடிகள் என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த நிலையில், சுப்பிரமணி மற்றும் அவரது கூட்டாளிகளான முத்து, மணிகண்டன், இசக்கி, வசந்தகுமார், சத்யா ஆகியோர் ஈரோடு மாவட்டம் பெருந்துறை அடுத்துள்ள குள்ளம்பாளையத்தில் உள்ள ஒரு வீட்டில் தங்கி இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து திருநெல்வேலி குற்றப்பிரிவு போலீஸ் எஸ்.ஐ ஆண்டோ தலைமையில், 5 தனிப்படை போலீசார் நேற்று முன்தினம் பெருந்துறை வந்தனர்.

5 ரவுடிகள் மீது போலிசார் துப்பாக்கிச்சூடு

அப்போது சிவசுப்பு மற்றும் கூட்டாளிகள் பதுங்கி இருந்த வீட்டை போலீசார் சுற்றி வளைத்தனர். பின்னர் எஸ்.ஐ ஆண்டோ துப்பாக்கி ஏந்திய படி வீட்டிற்குள் சென்று அவர்களை பிடிக்க முயன்றார். போலீசாரை பார்த்து அதிர்ச்சியடைந்த ரவுடி சிவசுப்பு அரிவாளால் ஆண்டோவை தாக்க முயன்றார். இதில், அதிர்ஷ்டவசமாக தப்பிய எஸ்.ஐ ஆண்டோ 5 தனிப்படை போலீசார் பாதுகாப்பு கருதி அந்த ரவுடிகள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினார். ஆனாலும் சுதாரித்து கொண்ட சிவசுப்பு உட்பட 5 பேரும் வீட்டின் பின்புறமாக தப்பி ஓடினர். பின்னர் அவர்களை போலீசார் விரட்டி பிடிக்க சென்றனர். இதில் சிவசுப்பு, முத்து மணிகண்டன் ஆகியோர் மட்டும் வலை வீசி பிடித்ததில் இவர்கள் இருவரும் சிக்கினர். சிவசுப்பு அவரது கூட்டாளிகளான 3 ரவுடிகள் போலீசாரிடம் இருந்து தப்பி ஓடிவிட்டனர்.

திருநெல்வேலி குற்றப்பிரிவு போலீஸ் போலிசார் துப்பாக்கிச்சூடு

பின்னர் பிடிபட்ட 2 பேரும் திருநெல்வேலி அழைத்து செல்லப்பட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக பெருந்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி மேற்கொண்டு வருகின்றனர். அப்போது மற்ற 3 ரவுடிகளும் போலீஸ் பிடியில் சிக்கியுள்ளதாக விசாரணையில் கூறப்படுகிறது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Share This Article

Leave a Reply