ஓ.எஸ்.டி. பிலிம்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் ராமசரவணனுக்கு சென்னை உயர் நீதிமன்றம் நோட்டீஸ்.

2 Min Read
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

 

- Advertisement -
Ad imageAd image
  • ஓ.எஸ்.டி. பிலிம்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் ராமசரவணனுக்கு சென்னை உயர் நீதிமன்றம் நோட்டீஸ்.
  • ஏஞ்சல் படத்தை முடித்து கொடுக்காததால் ரூ.25 கோடி இழப்பீடு கோரி பட தயாரிப்பாளர் ராமசரவணன் வழக்கு.
  • ராமசரவணன் தாக்கல் செய்த வழக்கை நிராகரிக்க கோரி அமைச்சர் உதயநிதி மனு.
  • விசாரணை செப்டம்பர் 23ம் தேதிக்கு தள்ளிவைத்தது சென்னை உயர் நீதிமன்றம் .

தனக்கு எதிரான வழக்கை நிராகரிக்க கோரி அமைச்சர் உதயநிதி தாக்கல் செய்த மனுவுக்கு பதிலளிக்கும்படி, ஓ.எஸ்.டி. பிலிம்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் ராமசரவணனுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றம்

ஓ.எஸ்.டி. பிலிம்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் ராமசரவணன் என்பவர் தாக்கல் செய்த மனுவில், உதயநிதி நாயகனாக நடிக்க, நாயகிகளாக நடிகைகள் ஆனந்தி, பாயல் ராஜ்புத் மற்றும் யோகிபாபு நடிக்க, இயக்குனர் கே.எஸ்.அதியமான் இயக்கத்தில், ஏஞ்சல் என்ற படத்தை தயாரிக்க முடிவு எடுக்கப்பட்டு, 2018ம் ஆண்டு படப்பிடிப்பு துவங்கியதாகவும், 80 சதவீத படப்பிடிப்பு நிறைவடைந்து விட்டதாக கூறியுள்ளார்.

இருபது சதவீத படப்பிடிப்பு நடத்த வேண்டியுள்ள சூழலில், ஏஞ்சல் படத்தை நிறைவு செய்யாமல், மாமன்னன் படத்தில் நடித்துள்ள உதயநிதி, அந்த படமே தனது கடைசி படம் என கூறியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

ஏஞ்சல் படத்திற்காக இதுவரை 13 கோடி ரூபாய் செலவிட்டுள்ள நிலையில், ஒப்பந்தப்படி, இன்னும் எட்டு நாட்கள் கால்ஷீட் தராமல் உதயநிதி புறக்கணித்து வருவதால், ஏஞ்சல் படத்தின் எஞ்சிய படப்பிடிப்பை நிறைவு செய்து தர வேண்டுமெனவும், 25 கோடி ரூபாய் இழப்பீடாக வழங்க வேண்டுமெனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.

சென்னை உயர் நீதிமன்றம்

இந்த வழக்கை நிராகரிக்க வேண்டும் எனக் கோரி உதயநிதி சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி டீக்காராமன், வழக்கை நிராகரிக்க கோரி உதயநிதி தாக்கல் செய்த மனுவுக்கு பதிலளிக்கும்படி, ஓ.எஸ்.டி. பிலிம்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் ராமசரவணனுக்கு உத்தரவிட்டு, விசாரணையை செப்டம்பர் 23ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

Share This Article

Leave a Reply