நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் – எடப்பாடி பழனிசாமி கண்டனம்..!

1 Min Read

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள டிவிட் பதிவில்;- நீட் தேர்விற்கான மதிப்பெண் வழங்கும் முறையில் பல்வேறு குளறுபடிகள் ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வந்துள்ளன.

- Advertisement -
Ad imageAd image
அதிமுக

தேர்வு மையங்களில் ஏற்பட்ட காலதாமதத்திற்கு ஏற்ப கருணை மதிப்பெண்கள் வழங்கப்பட்டதாக கூறும் நிலையில், இதுகுறித்து நீட் தேர்வு நடத்திய தேசிய தேர்வு முகமையின் விளக்கமும் வெளிப்படைத்தன்மை கொண்டதாக இல்லை.

இது தொடர்பாக, வடமாநிலங்களில் தேர்வு மையம் ஒதுக்குவது முதல் வினாத்தாள் வழங்குதல் வரை பல்வேறு நிலைகளில் முறைகேடுகள் நடந்துள்ளதாக குற்றச்சாட்டுகள் வந்துள்ளன.

நீட் தேர்வு

இந்த குளறுபடிகள் குறித்து வழக்கு தொடரப்பட்டுள்ள நிலையில், ஏற்கனவே நீட் தேர்வு குறித்த பல்வேறு காரணங்களாலும், இதுபோன்ற நடைமுறை குளறுபடிகள், அதிமுவின் நீட் தேர்வு எதிர்ப்பு நிலைப்பாட்டை உறுதிப்படுத்துகிறது.

இந்த ஆண்டு நீட் தேர்வில் நடந்த குளறுபடிகள் குறித்து வெளிப்படையான விளக்கம் அளிக்கவும், மாணவர்களின் மருத்துவ கனவை பாதிக்கும் நீட் தேர்வை ரத்து செய்து,

நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் – எடப்பாடி பழனிசாமி கண்டன

பழையபடி 12 ஆம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையிலேயே மருத்துவ சேர்க்கை நடத்த ஆவன செய்யவும் புதிதாக அமையவுள்ள ஒன்றிய அரசை வலியுறுத்துகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Share This Article

Leave a Reply