பத்து தல படத்தைப் பார்க்கப் பழங்குடியின மக்களுக்கு அனுமதி மறுத்து சர்ச்சையில் சிக்கிய திரையரங்கம் .
சிம்பு மற்றும் கௌதம் கார்த்திக் நடித்துள்ள ‘பத்து தல’ திரைப்படம் இன்று (மார்ச் 30) திரையரங்குகளில் வெளியானது. சென்னையில் உள்ள ஒரு பிரபலமான திரையரங்கில், பழங்குடியினர் சமூகத்தைச் சேர்ந்த சிலருக்கு டிக்கெட் இருந்தும் திரையரங்கில் நுழைய அனுமதி மறுக்கப்பட்டது. இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது.
காணொளி வைரலானதை அடுத்து, திரையரங்கம் ஊழியர்களின் செயலைக் கண்டித்த பார்வையாளர்கள், திரையரங்கம் நிர்வாகத்தை அவர்களின் டிக்கெட்டுகளை ஏற்றுத் திரைப்படத்தைப் பார்க்க அனுமதிக்குமாறு வலியுறுத்தினர். நிர்வாகம் குறிப்பிட்ட ஊழியர்களை எச்சரித்ததாகவும், பழங்குடியின மக்கள் தங்கள் வளாகத்தில் பத்து தல படத்தைப் பார்க்க அனுமதித்ததாகவும் திரையரங்கு உரிமையாளர் ஒருவர் தெரிவித்தார்.
மேலும் படத்தை தங்கள் திரையில் பார்த்து ரசிக்கும் வீடியோவையும் ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். அந்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. இதற்கிடையில், திரையரங்கின் அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்ட ஒரு அறிக்கை, அவர்களது ஊழியர்கள் தங்கள் சாதியின் காரணமாக அல்ல, ஆனால் அவர்கள் 12 வயதுக்குட்பட்ட குழந்தைகளை அழைத்து வந்ததால் அவர்களுக்கு அனுமதி மறுத்துள்ளனர் என்று கூறுகிறது. மேலும் 12 வயதுக்குட்பட்ட குழந்தைகளை U/A-ஐப் பார்க்க அனுமதிக்கக் கூடாது என்று தெரிவித்தனர் .
Leave a Reply
You must be logged in to post a comment.