மனசு புண்ணாயிருச்சு : ரஜினி, கமல் பேசியது வருத்தம் – செல்லூர் ராஜு உருக்கம்..!

2 Min Read

டாக்டர் கலைஞரை வாழ்த்த வேண்டும் என்று, வரலாற்றை மாற்றும் விதமாக ரஜினி, கமல் பேசியது வருத்தம் அளிக்கிறது என்று அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு கூறியுள்ளார்.

- Advertisement -
Ad imageAd image

அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் இன்று அக்கட்சியின் தலைமை அலுவலகமான எம்.ஜி.ஆர் மாளிகையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

செல்லூர் ராஜு

அப்போது பேசிய அவர்;- அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் எப்போதும் போல் ஆலோசனை வழங்கப்பட்டது. தேர்தலுக்கு முழு வீச்சில் பணியாற்ற வியூகங்கள் குறித்து பேசினார். தென் மாவட்டங்களில் எப்போதுமே அதிமுக ஆதரவு தான். சிறுபான்மையினர் கூட்டத்தில் பொதுச்செயலாளர் கலந்து கொண்டதில் ஆதரவு அதிகரித்துள்ளது. மக்களவைத் தேர்தலில் பெரிய கூட்டணி அமைப்போம் என்று பொதுச் செயலாளர் சொல்லி உள்ளார்” என்று கூறினார்.

அதனை தொடர்ந்து பேசிய செல்லூர் ராஜூ கலைஞர் 100 விழாவில் கலந்து கொண்டு பேசிய ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோரை கடுமையாக விமர்சித்தார். ரஜினிகாந்த அந்த விழாவில் பேசும் போது கலைஞர் தனது எழுத்தால் எம்.ஜி.ஆர், சிவாஜி என்ற இரு பெரும் நட்சத்திரங்களை உருவாக்கினார். அவர் தொடர்ந்து திரைத்துறையில் இருந்திருந்தால் பல நட்சத்திரங்களை உருவாக்கியிருப்பார் என்று பேசியிருந்தார். கலைஞர் எம்.ஜி.ஆரை நட்சத்திரமாக உருவாக்கினார் என்று ரஜினி பேசியதற்கு செல்லூர் ராஜு மறுப்பு தெரிவித்துள்ளார்.

அவரது வரலாற்றை மறைக்க கூடாது. திராவிட முன்னேற்றக் கழகத்தில் அண்ணாவுக்குப் பிறகு யார் தலைவராவது என்று பச்சு வந்த போது எல்லாரும் நாவலர் நெடுஞ்செழியன் வர வேண்டும் என்று சொன்ன போது எம்.ஜி.ஆர் தான் டாக்டர் கலைஞர் வர வேண்டும் என்று சொன்னார். நடிகர் எஸ்.எஸ்.ஆர் ஆகியோரை எல்லாம் சந்தித்து பேசி மக்களின் அடிப்படை தேவையை நிறைவேற்றுபவர் என்று டாக்டர் கலைஞரை தேர்வு செய்தனர். இதனை எங்கள் தங்கம் படத்தில் அவரே பேசி உள்ளார்.

செல்லூர் ராஜு

முரசொலி மாறன் கூட எம்.ஜி.ஆர் இல்லை என்றால் எங்கள் குடும்பத்தினர் தெருவுக்கு வந்திருப்போம் என்று தெரிவித்தார். டாக்டர் கலைஞரை வாழ்த்த வேண்டும் என்று வரலாற்றை மாற்றி ரஜினி, கமல் பேசியது வருத்தம் அளிக்கிறது. விக்ரம் படத்திற்கு பிறகு கமல் திமுகவுக்கு வாயை வாடகைக்கு விட்டு விட்டார். அதனால் எப்போதும் நியாமாக பேசும் சூப்பர் ஸ்டார் ரஜினியே இப்படி பேசியது வருத்தமளிக்கிறது. வள்ளலுக்கு எல்லாம் வள்ளல் , திராவிட கர்ணன் என எம்.ஜி.ஆருக்கு பெயர்சூட்டியவர் கருணாநிதி.

அதனால் ரஜினிகாந்தும் தவறாக , எம்.ஜி.ஆரின் வரலாற்றை மறைத்து பேசியது தவறு. நாங்கள் ரஜினி இப்படி பேசுவார் என்று எதிர்பார்க்கவே இல்லை. ஆட்சிக்கு பயந்து, தனது சிவாஜி படத்திற்கு ஏற்பட்டது போல் பாதிப்பு இனிவரும் படங்களுக்கு வந்து விடக்கூடாது என்பதற்காக ரஜினி இப்படி பேசியுள்ளார்” என்று செல்லூர் ராஜு கூறினார்.

Share This Article

Leave a Reply