ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி மையத்தில் இருந்து சந்திராயன்-3 விண்கலம் வெற்றிகரமாக புவி வட்டப்பாதையில் நிலை நிறுத்தப்பட்டது.

4 Min Read
ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி ஆய்வு மையம்

ஆகஸ்ட் 23ஆம் தேதி நிலவில் தரையிறக்கப்படும் என இஸ்ரோ தலைவர் சோம்நாத் கூறினார். பல ஆண்டுகள் நிலவில் ஆராய்ச்சி மேற்கொண்டு வந்தாலும் நிலவின் தென்துருவத்தில் இதுவரை எந்த நாடும் ஆராய்ச்சி மேற்கொண்டதில்லை. இந்தியா மட்டுமே நிலவின் தென்துருவத்தை ஆராய்வதற்காக சந்திராயன் திட்டத்தை தொடங்கியது.

- Advertisement -
Ad imageAd image

முதல் முறையாக கடந்து 2008 ஆம் ஆண்டு சந்திராயன் 1 விண்ணில் செலுத்தப்பட்டது. சந்திராயன் 1 விண்கலம் நிலவின் சுற்றுப்பாதையில் வளம் வந்து ஆய்வுகளை வெற்றிகரமாக செய்து முடித்தது. பின்னர் சந்திராயன் 2 திட்டத்தில் நிலவின் பரப்பில் கருவிகள் இறக்கி ஆய்வுகளில் செய்ய திட்டமிட்டது. அதன்படி கடந்த 2019 ஆம் ஆண்டு சந்திராயன் 2 விண்ணில் செலுத்தப்பட்டது. ஆனால் சந்திரன் இரண்டில் லேண்டரான விக்ரம் லேண்டர் சரியாக தரையிறங்காமல் நிலவில் மோதி திட்டம் தோல்வியில் முடிந்தது.

கடந்த முறை அடைந்த தோல்வியில் இருந்து இம்முறை தவறுகளை திருத்திக்கொண்டு சரியாக நிலவில் லேண்டர் கருவியை தரை இறக்கும் பணியை விஞ்ஞானிகள் மேற்கொண்டுள்ளனர். இதையடுத்து நேற்று மதியம் 2:30 மணிக்கு எல் எம் வி 3 எம் 4 ராக்கெட் மூலம் சந்திராயன் 3 விண்கலம் விண்ணில் வெற்றிகரமாக ஏவப்பட்டது. சரியாக 2:30 மணிக்கு ராக்கெட்டின் இரண்டு எரிபொருள் நிரம்பிய அலகுகள் எரியூட்டப்பட்டு தீயை வெளியேற்றியபடி ராக்கெட் விண்ணில் பாய் தொடங்கியது.

சரியாக 127 வினாடிகளில் இரண்டு ஏரி பொருள் அலகுகள் பிரிந்தன அதை தொடர்ந்து 194 வினாடியில் ராக்கெட்டின் மேல் பக்கம் கவசமும் 35 ஆவது நொடியில் இரண்டாவது ஏரி பொருள் அலகும் பிரிந்தது தொடர்ந்து விண்கலனை சுமக்கும் பிரிவு பயணித்து இறுதியாக 17வது நிமிடத்தில் விண்கல் மின்கலம் புவி சுற்றுவட்டார் பாதையில் வெற்றிகரமாக நிலை நிறுத்தப்பட்டது.

பின்னர் ஒன்றிய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறை இணையமைச்சர் ஜிதேந்திர சிங் நிருபர்களிடம் கூறியதாவது: சந்திராயன் 3 விண்ணில் செலுத்தப்பட்டது இந்தியாவிற்கு பெருமிதமான செய்தி. இது நிச்சயமாக ஒரு மகத்தான தருணம் ஒரு இலக்கை நோக்கி வரலாற்று பயணத்தின் தொடக்கம் இந்தியாவை பெருமைப்படுத்திய இஸ்ரோவுக்கு நன்றி. 60 ஆண்டுகளுக்கு முன்னர் விக்ரம் சாராபாய் கண்ட கனவை நினைவாக்கியுள்ள நாள். இந்தியாவின் தற்சார்பு நிலை நிரூபிக்கப்பட்டுள்ளது. இதுவரை யாரும் கண்டிராத சந்திராயன் மூன்று ஆராய உள்ளது. கடந்த மூன்று நான்கு ஆண்டுகளாக அதிகமான விண்வெளி திட்டங்களை இந்தியா செயல்படுத்தப்பட்டு வருகிறது. அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த பொருளாதார வளர்ச்சியில் இந்திய உலக நாடுகளுக்கு வழிகாட்டியாக திகழ்கிறது. இவ்வாறு அமைச்சர் கூறினார்.

மேலும் இஸ்ரோ தலைவர் சோம்நாத் நிருபர் நிருபர்களிடம் கூறியதாவது: சந்திராயன் மூன்று வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது அனைத்து செயல்பாடுகளும் சரியாக உள்ளது வரும் ஆகஸ்ட் 1ம் தேதி புவி வட்ட பாதையில் இருந்து விலகி நிலவின் சுற்றுப்பாதையில் பயணிக்க தொடங்கும். இந்தத் திட்டத்தில் ஒவ்வொரு கட்டமும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. ஆகஸ்ட் 23ஆம் தேதி மாலை 5.47 மணியளவில் விக்ரம் லேன்டர் தரையிறங்கும். நிலவை நோக்கி லேண்டேட் 100 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும், நிலவை நெருங்கியவுடன், 30 கிலோமீட்டர் வேகத்தில் சென்று தரை இறங்கும். சந்திராயன் திட்டத்தில் இருந்து தவறுகள் குறித்து ஒரு வருடம் ஆராய்ச்சி செய்தோம். அதன் பின்னர் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகளை செய்து திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.

சந்திராயன் மூன்றில் ஆர்பிட் கருவிக்கு லேண்ட் சுமந்து சென்று நிலவுக்கு அனுப்பும் நேரக் கருவி சந்திராயன் 2 வெண்கலம் தகவல்களை அனுப்பும் சந்திராயன் ஏவப்பட்ட ராக்கெட்டில் 85 சதவீதம் குறிப்பாக உலோக பாகங்கள் தனியார் தொழிற்சாலைகளில் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. சந்திராயன் மூன்று விண்கலம் நிலவின் வெப்பத்தன்மை மற்றும் இரசாயன பரப்பு என இரண்டு முக்கிய கோணங்களில் ஆராய்ச்சி மேற்கொள்ளபட உள்ளது.

மேலும் நிலவில் ஏற்படும் நில அதிர்வுகள் உள்ளிட்டவை குறித்து ஆராய்ச்சி செய்யப்பட உள்ளது. நிலவின் வளிமண்டலம் மற்றும் அதில் இருக்கும் கனிமங்கள் குறித்து ஆராய உள்ளோம். இதுபோன்ற தனித்துவமான ஆராய்ச்சிகளை யாரும் மேற்கொண்டதில்லை. மேலும் நிலவின் தென்புறமும் அதிகம் ஆராய்ச்சி செய்யப்படவில்லை நிலவின் மத்திய பகுதிகள் உள்ளிட்டவை அதிகம் ஆராயப்பட உள்ளது. சந்திராயன் இரண்டிலிருந்து சந்திரனின் மூன்றில் சில மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. சந்திராயன் இரண்டில் 5எஞ்சின்களில் இருந்த நிலையில் தற்போது 4 எஞ்சின்களாக குறைக்கப்பட்டுள்ளது. மேலும் 2 இன்ஜின்கள் தரையிறங்க பயன்படுத்தப்பட உள்ளது.

இம்முறை எரிபொருளை அதிக அளவில் நிரப்பியுள்ளோம். லேசர் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி தர இயக்கம் செய்ய உள்ளோம். தரையிறக்கும் நிலப்பரப்பை அதிகரித்துள்ளோம். இதன் காரணமாக மென்மையான தரை இறக்கம் சாத்தியமாகும். ப்ளூ பேக்ஸ் திட்டம் தொடர்பான திட்ட அறிக்கை இன்னும் தயாரிக்கப்படவில்லை. அது தொடர்பான கட்டமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

அதை தொடர்ந்து சந்திராயன் 3 திட்ட இயக்குனர் வீரமுத்துவேல் நிருபர்களிடம் கூறியதாவது: சந்திரன் 3 வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டுள்ளது.நிலவின் சந்திராயன் இறங்கும் நாளை எதிர்பார்த்து காத்திருக்கிறோம். சந்திராயன் 3 காக உழைத்து என் குழுவுக்கும் இஸ்ரோ அதிகாரிகளுக்கும் அனைத்து ஊழியர்களுக்கும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். நிலவின் நோக்கிய நம் பயணம் தொடங்கிவிட்டது. வின்கலனை இயக்கத்தை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். அடுத்து 48 நாட்கள் மிகவும் முக்கியமானவை. ஏற்கனவே சந்திரன் 2 ரோபோவின் சக்கரங்களில் அசோக சக்கரமும், இஸ்ரோவின் சிங்கமும், பொறிக்கப்பட்டது.

அது நிலவைச் சென்றடையவில்லை. தற்போது மீண்டும் அதை பொறுத்திருக்கிறோம் இம்முறை ரோவர் நிலவில் பயணிக்கும் போது அதன் அச்சுக்களை படம் பிடிக்க ரோபோவின் பின்பகுதியில் கேமரா பொருத்தப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் தமிழர்களின் பங்களிப்பு அதிகம் இவ்வாறு அவர் கூறினார்.

Share This Article

Leave a Reply