நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணி புதுச்சேரியை சேர்த்து 40 தொகுதிகளிலும் வெற்றி பெற்றது எல்லோரும் அறிவர். திமுக ஆட்சியின் மீது மக்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சி இருக்கிறது என்று பேசப்பட்டு வந்த நிலையில் இந்த வெற்றி சாத்தியமானது. இதை அப்படியே அடுத்த கட்டத்திற்கு நகர்த்துவதற்கு தயாராகிக் கொண்டிருக்கிறது திமுக. வருகின்ற 2026 சட்டசபை தேர்தலில் யார் போட்டியிட வேண்டும், யாருக்கு வாய்ப்பு அதிகம், கூட்டணிகளுக்கு எந்தெந்த தொகுதியில் ஒதுக்குவது உள்ளிட்ட அனைத்தையும் எதிர்கொள்ள ஒரு ஒருங்கிணைப்பு குழுவை அறிவித்துள்ளது திமுக தலைமை. ஸ்டாலின் அறிவித்த அந்த குழுவில் முக்கிய பொறுப்பு திமுக இளைஞரணி தலைவரான உதயநிதி ஸ்டாலினுக்கு வழங்கப்பட்டிருக்கிறது. சில மூத்த அமைச்சர்களும் இடம்பெற்று இருக்கிறார்கள்.

உதயநிதி ஸ்டாலினுக்கு ஏன் முக்கியத்துவம் என்கிற கேள்வி எழும்போது அவர் தொடர்ந்து பல வெற்றிகளை ஈட்டி தந்துள்ளார் என்பதுதான் பதிலாகவே இருந்து வருகிறது நடந்து முடிந்த விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தலில் திமுக பெருவெற்றி பெற்றிருக்கும் நிலையில் உதயநிதி ஸ்டாலினுக்கான இந்த பொறுப்பு கூடுதலாக்கப்பட்டு இருக்கிறது.
2021 சட்டமன்றத் தேர்தல் மட்டுமல்லாது. அதற்குப் பிறகு நடந்த உள்ளாட்சித் தேர்தல், நாடாளுமன்றத் தேர்தல், சட்டமன்ற இடைத்தேர்தல்களிலும் திமுகவே பெரிய வெற்றியை பெற்றிருக்கிறது. இதனையடுத்து வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலுக்கான ஏற்பாடுகளை திமுக செய்து வருகிறது. தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவும் 2026 இல் மீண்டும் ஆட்சியைப் பிடிப்போம் என சபதம் ஏற்று பணிகளை செய்து வருகின்றது. மேலும் நாடாளுமன்ற தேர்தலில் தோல்விக்கான காரணம் குறித்து ஆலோசனை மேற்கொண்டு வருகிறார் அக்கட்சியின் பொதுச் செயலாளரான எடப்பாடி பழனிச்சாமி. இந்த நிலையில் சட்டமன்ற தேர்தலுக்கான முன்னேற்பாடுகளை முதல் கட்சியாக செய்திருக்கிறது திமுக.

தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் வேட்பாளர் தேர்வு உள்ளிட்ட பல பணிகளை தற்போதைய அந்த கட்சியினர் மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது. மேலும் கடந்த தேர்தலில் தோல்வியை சந்தித்த தொகுதிகளை எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்று முடிவெடுத்து கட்சிப் பணிகள் நடைபெற்று வருவதாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில் 2026 சட்டமன்ற தேர்தலில் எதிர்கொள்ள வகையில் ஒருங்கிணைப்பு குழுவை அறிவித்திருக்கிறார் அக்கட்சியின் தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான முக ஸ்டாலின். இந்த குழுவில் அமைச்சர் கேஎன் நேரு, தங்கம் தென்னரசு, எவா வேலு, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், ஆர் எஸ் பாரதி உள்ளிட்டோர் இடம் பெற்று இருக்கின்றனர். கட்சியில் செய்ய வேண்டிய மாற்றங்கள் மற்றும் பல்வேறு விவகாரங்கள் குறித்து இந்த குழு திமுக தலைவரான ஸ்டாலினுக்கு பரிந்துரைக்கும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

கடந்த நாடாளுமன்ற தேர்தலில் இதே போன்ற ஒருங்கிணைப்புக் குழுவை முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்த ஒருங்கிணைப்பு குழு விரைவில் 2026 சட்டமன்ற தேர்தலுக்கான பணிகளை துவக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுதொடர்பாக திமுக வெளியிட்டுள்ள அறிக்கையில்,”2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக கட்சிப் பணிகளை ஒருங்கிணைக்கவும், மேற்பார்வையிடவும் அமைக்கப்பட்ட ஒருங்கிணைப்புக்குழு தனது பணிகளை மிகச் சிறப்பாகச் செய்தது. அதே வகையில் வரவிருக்கும் 2026 சட்டப்பேரவைத் தேர்தலை எதிர்கொள்ளும் பொருட்டு, கட்சியில் மேற்கொள்ள வேண்டிய மாறுதல்கள் – அமைப்பு ரீதியான சீரமைப்புகளை கட்சித் தலைவருக்கும் – தலைமைக்கும் பரியதுரைக்கவும், தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் “ஒருங்கிணைப்புக்குழு” பின்வருமாறு அமைக்கப்படுகிறது. கே.என்.நேரு, ஆர்.எஸ்.பாரதி, எ.வ.வேலு, தங்கம் தென்னரசு, உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்”



Leave a Reply
You must be logged in to post a comment.