ஆளுநரின் திருவள்ளுவர் தினம் வாழ்த்தில் புதிய சர்ச்சை,காவி உடையில் வள்ளுவர்

2 Min Read
ஆளுநர்

காவி உடையில் உள்ள திருவள்ளுவர் புகைப்படத்தை தமிழக ஆள்நர் பகிர்ந்து வாழ்த்து சொல்லி இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

- Advertisement -
Ad imageAd image

காவி உடையில் உள்ள திருவள்ளுவர்

காவி உடையில் உள்ள திருவள்ளுவர் புகைப்படத்தை தமிழக ஆள்நர் பகிர்ந்து வாழ்த்து சொல்லி இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

திருவள்ளுவர்

திருவள்ளுவர் தினத்தையொட்டி பிரதமர் மோடி, பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட அரசியில் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் ஆளுநர் மாளிகை சார்பில் எக்ஸ் பக்கத்தில் திருவள்ளுவர் தின வாழ்த்தை ஆளுநர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் வாழ்த்துடன் இணைக்கப்பட்ட வீடியோ பதிவில், காவி நிறத்தில் இருக்கும் திருவள்ளுவர் புகைப்படத்திற்கு ஆளுநர் மற்றும் அவரது மனைவி மலர் தூவி மரியாதை செலுத்துகின்றனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அரசு சுற்றுலா மாளிகையில் மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.

மேலும் ஆளுநர் ரவி வெளியிட்ட வாழ்த்துக் குறிப்பில் ” திருவள்ளுர் தினத்தில், ஆன்மிக பூமியான நமது தமிழ்நாட்டில் பிறந்த பெரும்புலவரும், சிறந்த தத்துவஞானியும் பாரதிய சனாதன பாரம்பரியத்தின் பிரகாசமான துறவியுமான திருவள்ளுவருக்கு எனது பணிவான மரியாதையை செலுத்துகிறேன். அவரது ஞானம் நமது தேசத்தின் சிந்தனை மற்றும் அடையாளத்தை வடிவமைத்து, வளப்படுத்தி ஒட்டுமொத்த மனித குலத்துக்கு வழிகாட்டியாகவும் உத்வேகத்தின் ஆதாரமாகவும் நீடிக்கிறது. இந்த புனிதமான நாளில், அனைவருக்கும் எனது அன்பான நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். ” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

’பாரதிய சனாதன பாரம்பரியத்தின் பிரகாசமான துறவியுமான திருவள்ளுர்’ என்று குறிப்பிடப்பட்டதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

இதற்கு தமிழக முதல்வர் பதிலடி கொடுத்துள்ளார்.

திருவள்ளுவர்

‘தமிழ்நாட்டில் வள்ளுவரை யாரும் கறைப்படுத்த முடியாது’

“பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற சமூகநீதிக் கோட்பாட்டையும், முயற்சி மட்டுமே வெற்றியைத் தரும் என்ற தன்னம்பிக்கை ஊக்கத்தையும் கொடுத்தவர் வள்ளுவர் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.

தமிழ்நாட்டில் பொங்கல் தினத்துக்கு மறுநாள் திருவள்ளூவர் தினம் கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில், தமிழக முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் ட்விட்டரில், ““தமிழ்நாட்டில் வள்ளுவரை யாரும் கறைப்படுத்த முடியாது” எனக் கூறியுள்ளார்.

இது குறித்த மேலும் அவர், “தமிழினத்தில் பிறந்து அமிழ்தமிழில் அறம் உரைத்து உலகம் முழுமைக்குமான நெறிகள் சொன்ன வான்புகழ் வள்ளுவர் நாள் வாழ்த்துகள்!

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற சமூகநீதிக் கோட்பாட்டையும் – முயற்சி மட்டுமே வெற்றியைத் தரும் என்ற தன்னம்பிக்கை ஊக்கத்தையும் – அறன் எனப் பட்டதே இல்வாழ்க்கை என்ற கருத்தியலையும் வழிகாட்டியவர் வள்ளுவர்.

133 அடியில் சிலையும் – தலைநகரில் கோட்டமும் அமைத்துப் போற்றும் குறளோவியத் தமிழ்நாட்டில் வள்ளுவரை யாரும் கறைப்படுத்த முடியாது. குறள் நெறி நம் வழி! குறள் வழியே நம் நெறி!” எனக் கூறியுள்ளார்.

 

Share This Article

Leave a Reply