கூடலூரில் சிறுத்தை தாக்கியதில் சிறுமி காயம், பெண் உயிரிழப்பு.

2 Min Read
சிறுத்தை கூண்டு

கூடலூர் அருகே சிறுத்தை தாக்கியதில் நான்கு வயது சிறுமி காயம் அடைந்தார்.இதனை தொடர்ந்து அப்பகுதியை சேர்ந்த மக்கள் தங்கள் எதிர்ப்பை தெரிவிக்கும் விதமாக, சாலை அமர்ந்து தங்கள் எதிர்ப்பை தெரிவிக்கும் ஊர் மக்கள். தொடரும் சிறுத்தையின் அட்டகாசம்.சிறுத்தையை பிடிக்க அரசுக்கு கோரிக்கை.ஏற்கனவே சிறுத்தை தாக்கி பெண் ஒருவர் உயிரிழப்பு ஏற்பட்டுள்ள நிலையில் மீண்டும் சிறுத்தை தாக்குதல் நடந்துள்ளது.

- Advertisement -
Ad imageAd image
சிறுத்தை பிடிக்க கூண்டு

 

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள கொளப்பள்ளி சேவியர் மட்டம் பகுதியைச் சேர்ந்த வசந்த் என்பவரின் மகள் கீர்த்திகா (4) வீட்டின் வெளியே விளையாடிக் கொண்டிருக்கும் பொழுது சிறுத்தை திடீரென சிறுத்தை தாக்கியது.சிறுத்தை தாக்கியதில் கீர்த்திகா காயங்களுடன் மீட்கப்பட்டார்.மீட்கப்பட்ட சிறுமியை பந்தலூர் அரசு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு முதல் சிகிச்சை அளிக்கப்பட்டது.சிறுத்தை தாக்கியதில் கீர்த்திகாவின் முகம், கால், கை என பல பகுதிகளில் சிறுத்தையின் நகங்கள் கீரப்பட்டு காயங்கள் ஏற்பட்டது.சிறுத்தை தாக்கியதில் சிறுமி நிலைகுலைந்து போனார்.

இதனைத் தொடர்ந்து மேற்சிகிச்சைக்காக குழந்தை கீர்த்திகாவுக்கு ஸ்கேன் எடுப்பதற்காக கூடலூர் தலைமை மருத்துவமனைக்கு நேற்று இரவு அழைத்து சென்றனர்.அதனை தொடர்ந்து அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.இதே போன்று ஏற்கனவே கடந்த மாதம் 22ஆம் தேதி இதே பகுதியில் தேயிலை தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்த 3 பெண்களை சிறுத்தை தாக்கியதும், அதில் இரண்டு பெண்கள் படுங்காயங்களுடனும், ஒரு பெண் கோவை மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்ததும் குறிப்பிடத்தக்கது இப்பகுதியில் தொடரும் சிறுத்தையின் அட்டகாசத்தால் அப்பகுதியில் வசித்து வரும் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

கூண்டு

 

பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தும் சிறுத்தையை வனத்துறையினர் கூண்டு வைத்து பிடிக்க அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதனைத் தொடர்ந்து பொதுமக்கள் நலனுக்காக வனத்துறையினர் அப்பகுதியில் அட்டகாசம் செய்யும் சிறுத்தை பிடிக்க கூண்டு வைத்துள்ளனர்.சிறுத்தையை உடனடியாக பிடிக்க வேண்டும் என்று கூறி வனத்துறையை கண்டித்து,சிறுத்தையால் அவதிப்பட்ட அப்பகுதி பொதுமக்கள் இன்று கொளப்பள்ளி பகுதியில் கடையடைப்பு மற்றும் போராட்டம் நடைபெற்றது . இதில் அப்பகுதியின் தொகுதி MLA பொன் ஜெயசீலன் மற்றும் பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டனர்.விரைவில் சிறுத்தையை பிடிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த பகுதி மக்கள் விரும்புகின்றனர்.இல்லையென்றால் பெரும் பாதிப்பு ஏற்படும் என்று அஞ்சுகின்றனர்.அரசு நடவடிக்கை எடுக்குமா?

Share This Article

Leave a Reply