சிறுமி கொடூரமாக கொலை : கொலையாளியின் திடுக்கிடும் வாக்குமூலம் – நடந்தது என்ன..?

3 Min Read
சிறுமியின் உடல்

புதுச்சேரியில் காணாமல் போன ஒன்பது வயது சிறுமி கொடூரமாக கொலை செய்யப்பட்டு கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் சாக்கு மூட்டையில் கட்டி சாக்கடையில் வீசப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

- Advertisement -
Ad imageAd image

புதுச்சேரி மாநிலம் சோலை நகர் பகுதியைச் சேர்ந்த 9 வயது சிறுமி ஒருவர் அரசு பள்ளியில் ஐந்தாம் வகுப்பு பயின்று வந்தார். கடந்த சனிக்கிழமை வழக்கம் போல தெருவில் தனது நண்பர்களுடன் விளையாட சென்றார். ஆனால், சிறுமி மாலை ஆகியும் வீடு திரும்பாததால், சிறுமியின் பெற்றோர் பல இடங்களில் தேடினர்.

சிறுமியின் தாய்

சிறுமி காணாமல் போனது குறித்து முந்தியால்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தனர். போலீசார் அக்கம்பக்கத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளை வைத்து சிறுமியை தேடி வந்தனர்.

இந்த நிலையில் நேற்று மதியம் அங்குள்ள அம்பேத்கர் நகர் சாக்கடை கால்வாயில் சந்தேகத்திற்கிடமாக மூட்டை ஒன்று கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனடியாக அங்கு சென்ற போலீசார் மூட்டையை கைப்பற்றி பிரித்து பார்த்த போது அதில் சிறுமி கை, கால்கள் கட்டப்பட்டு கிடந்தார்.

கொலையாளி கருணாஸ்

இந்த கொலையின் பின்னணியில் உள்ள கொலையாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் எனக் கூறி அந்தப் பகுதி மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

காணாமல் போன சிறுமி சாக்கு மூட்டையில் சடலமானது எப்படி.? கொடுரமாக சிறுமியை கொன்று வீசிய யார் பல்வேறு கொணங்களில் போலீசார் தீவிர விசாரணையில் தொடங்கினர்.

கொலையாளி விவேகானந்தன்

சிறுமியின் வீட்டில் இருந்து 50 அடி தொலைவில் உள்ள சாக்கடை கால்வாயில் சிறுமியின் உடல் கண்டெடுக்கப்பட்டதால் கொலையாளி இதேபகுதியை சேர்ந்தவராக தான் இருக்கும் என்று முடிவுக்கு வந்தனர்.

அந்த பகுதியில் வசிக்கும் நபர்களிடம் விசாரணையில் ஈடுபட்டு கொண்டிருந்த போது போலீசாரை கண்டதும் பதற்றத்துடன் நடந்து கொண்ட 19 வயதான கருணாஸ் மீது சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

அந்த மிருகங்களை தூக்கில் போடுங்க.. சிறுமிக்கு நீதி கேட்டு புதுவை பொதுமக்கள் சாலை மறியல்

போலீசார் அந்த சிறுவனிடம் கேட்ட கேள்விக்கு நடுக்கத்துடன் பதில் அளித்ததால் கருணாஸை போலீசார் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரித்தனர். இந்த கொலையின் பின்னணி கொலையாளியின் திடுக்கிடும் வாக்குமூலம் தற்போது காணலாம்;-

சம்பவந்தன்று வீட்டில் வெளியே விளையாடி கொண்டிந்த சிறுமியை அந்த வழியாக சென்ற விவேகானந்தன் வயது (59). அந்த சிறுமியை பார்த்து உள்ளான். பின்னர் அருகே சென்று சிறுமியிடம் பேச்சு கொடுத்தவர் ஐஸ்கிரீம் வாங்கி தருவதாக கூறி, அதேதெருவில் உள்ள தனது பாலடைந்த வீட்டிற்கு சென்று உள்ளார்.

அந்த மிருகங்களை தூக்கில் போடுங்க.. சிறுமிக்கு நீதி கேட்டு புதுவை பொதுமக்கள் சாலை மறியல்

அந்த வகையில் சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுக்க சிறுமி அச்சத்தில் அளறி துடித்துள்ளார். அப்போது அந்த வழியாக சென்ற கருணாஸ் சத்தம் கேட்ட விவேகானந்தனின் வீட்டிற்குள் சென்று பார்த்துள்ளார்.

அப்போது சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டு கொண்டிருந்ததை பார்த்த கருணாஸ் தானும் அந்த வக்கீர செயலில் ஈடுபட்டுள்ளார். இரு கயவர்களிடம் சிக்கி துடித்துடித்து போன சிறுமி தப்பிக்க முயன்றதில் திடீரென்று மயங்கி கீழே விழுந்தாள்.

சிறுமியின் படுகொலை சம்பவம்

அதனை பார்த்து சிறுமி உயிரிழந்து விட்டதாக நினைத்த விவேகானந்தன் கருணாஸ் இருவரும் போதையின் உச்சகட்ட செயலில் ஈடுபட்டுள்ளனர். சிறுமியின் கை, கால்களை கட்டி சாக்கு மூட்டையில் உடலை போட்டு வீட்டின் பின்புரத்தில் சாக்கடை கால்வாயில் தூக்கி வீசியுள்ளனர்.

இதில் சுயநினைவை இழந்த சிறுமி தண்ணீரின்றி மூச்சடைந்து துடித்துடித்து உயிரிழந்ததாக தெரிகிறது. இந்த கோர சம்பவம் விசாரணையில் தெரியவர விவேகானந்தன் கருணாஸ் இருவரும் மீதும் போக்சோ கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.

அந்த மிருகங்களை தூக்கில் போடுங்க.. சிறுமிக்கு நீதி கேட்டு புதுவை பொதுமக்கள் சாலை மறியல்

உயிரிழிந்த சிறுமிக்கு நீதி கேட்டு புதுச்சேரி முழுவதும் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கைதான வீட்டின் முன்பு குவிந்த பெண்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் கொலையாளிக்கு உடனடியாக உரிய கடுமையான தண்டனை பெற்று தர வேண்டுமென பொதுமக்கள் ஆதங்கம் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் 9 வயது சிறுமியின் கொடூர கொலை தற்போது நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது.

Share This Article

Leave a Reply