செஞ்சி அருகே லாரியும், தனியார் பேருந்தும் நேருக்கு நேர் மோதி விபத்தில் லாரி ஓட்டுனர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். பின்னர் அரை மணி நேரம் போராடி உடலை மீட்ட தீயணைப்பு துறையினர்.
விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அடுத்த அண்ணமங்கலம் கூட்டு சாலை அருகே தேனி மாவட்டம் கம்பத்திலிருந்து செஞ்சி வழியாக சேத்பட் மார்க்கமாக திராட்சை ஏற்றி சென்ற லாரியும் மேல்மலையனூரில் இருந்து விழுப்புரம் நோக்கி சென்ற தனியார் பேருந்தும் நேருக்கு நேர் மோதிய விபத்தில்,

லாரி ஓட்டுநர் தேனி மாவட்டம் கம்பம் அடுத்த பூசாணம் பட்டி கிராமத்தை சேர்ந்த நாகராஜ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
மேலும் தனியார் பேருந்து பயணம் செய்த 15 மேற்பட்டவர்களுக்கு காயங்கள் ஏற்பட்டு, 108 ஆம்புலன்ஸ் மூலம் செஞ்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

அங்கு மருத்துவர்கள் முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் திருவண்ணாமலை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர்.

மேலும் லாரியில் தேனி மாவட்டம் கம்பம் அடுத்த பூசாணம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ஓட்டுநர் நாகராஜ் லாரியில் சிக்கிக்கொண்ட நிலையில் மேல்மலையனூர் தீயணைப்பு துறை வீரர்கள் சுமார் அரை மணி நேரமாக போராடி உடலை மீட்டு,

உடற்கூறு ஆய்விற்காக ஆம்புலன்ஸ் மூலம் செஞ்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இந்த விபத்து குறித்து வளத்தி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Leave a Reply
You must be logged in to post a comment.