தஞ்சாவூரில் அருள்மிகு கருணாசாமி கோயிலில் கந்த சஷ்டி பெருவிழா, திருக்கல்யாணம் வெகு விமர்சையாக நடைபெற்றது.!

2 Min Read
  • தஞ்சாவூரில் அருள்மிகு கருணாசாமி கோயிலில் கந்த சஷ்டி பெருவிழா, திருக்கல்யாணம் வெகு விமர்சையாக நடைபெற்றது பக்தர்கள் சுவாமி தரிசனம்

தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறை மற்றும் அரண்மனை தேவஸ்தானத்திற்கு உட்பட்ட தஞ்சையை அடுத்த கரந்தையில் ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலான மிகவும் பழமை வாய்ந்த அருள்மிகு பெரியநாயகி அம்பாள் உடனுறை வசிஷ்டேஸ்வர சுவாமி என்கிற கருணாசாமி கோயில் உள்ளது, இக்கோயிலில் கந்த சஷ்டி பெருவிழா கடந்த 2 ந்தேதி தொடங்கி தினமும் சிறப்பு பூஜைகள் நடைபெற்று.

- Advertisement -
Ad imageAd image

கடந்த 7 ந் தேதி சூரசம்ஹாரம் நடைபெற்றது, பின்னர் அதனைத் தொடர்ந்து இன்று ஸ்ரீ தெய்வானை சுப்பிரமணியர் திருக்கல்யாணம் வெகு விமரிசையாக நடைபெற்றது, சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க யாகம் வளர்த்து சுவாமிக்கு மாலை மாற்றி, மாங்கல்ய தாரணம் செய்து திருக்கல்யாணம் சிறப்பாக நடைபெற்று மஹாதீபாரதனை காட்டப்பட்டது, இதில் ஏராளமான பக்தர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

 

இக்கட்டுரையைச் சரிபார்ப்பதற்காக மேலதிக மேற்கோள்கள் தேவைப்படுகின்றன. நம்பத்தகுந்த மேற்கோள்களைத் தருவதன் மூலம் இக்கட்டுரையை மேம்படுத்த உதவுங்கள். பக்கம் பூட்டப்பட்டிருந்தால் பேச்சுப் பக்கத்தில் தகவல்களைத் தரவும். மேற்கோள்கள் இல்லாத கட்டுரைப் பகுதிகளை கேள்விக்கு உட்படுத்துவதுடன் நீக்கப்படவும் கூடும்.

இக்கட்டுரையின் தலைப்பு விக்கிப்பீடியாவின் பெயரிடல் மரபுக்கோ, கலைக்களஞ்சிய பெயரிடல் மரபுக்கோ ஒவ்வாததாக இருக்கலாம்
இக்கட்டுரையின் தலைப்பினை பெயரிடல் மரபுக்கு ஏற்றவாறு மாற்றக் கோரப்பட்டுள்ளது. உங்கள் கருத்துக்களை உரையாடல் பக்கத்தில் தெரிவியுங்கள்.
கந்த சஷ்டி என்பது முருகக் கடவுள் சூரனை அழித்த பெருமையை சைவ சமயத்தவர்கள் கொண்டாடும் ஒரு விழாவாகும். சஷ்டி என்றால் ஆறு ஆகும். .மாதந்தோறும் சஷ்டி திதி வந்தாலும், முருகனுக்குரிய விரத நாட்கள் வந்தாலும், ஐப்பசி மாதம் சுக்கிலபட்ச (வளர்பிறையில்) பிரதமை முதல் சஷ்டி ஈறாக உள்ள ஆறு நாட்களும் கந்த சஷ்டி (மகா கந்த சஷ்டி) காலமாகும். இந்த ஆறு நாளையும் சைவர்கள் விரத நாட்களாக கருதுகின்றனர்.

ஆறு நாட்கள் நடைபெற்ற சூர சம்காரத்தின் முடிவில் முருகன் மா மரமாக நின்ற சூரனை தன் சக்தியாகிய வேலினால் பிளந்தார். பிளவுபட்ட மாமரம் சேவலும் மயிலுமாக மாறவும், சேவலை கொடியாகவும் மயிலை வாகனமாகவும் முருகன் ஏற்றுக்கொண்டார். இது கந்தபுராணத்தில் சொல்லப்பட்ட ஒரு நிகழ்ச்சியாகும்.

கந்தபுராணத்தில் வரும் சூரபத்மன், சிங்கமுகன், தாரகாசுரன் ஆகியோர் முறையே சைவ சித்தாந்தத்தில் பேசப்படும் ஆணவம், கன்மம், மாயை என்னும் மும்மலங்களைக் குறிப்பதாகக் கருதப்படுகின்றது. ஆன்மாவைத் துன்புறுத்தும் மலங்களின் கெடுபிடியில் இருந்து ஆன்மாவுக்கு விடுதலை அளிப்பதோடு ஆணவமலத்தின் பலத்தைக் குறைத்து அதனைத் தன் காலடியில் இறைவன் வைத்திருப்பதை உணர்த்துவதே சூர சம்காரமாகும்

கொஞ்சம் இதையும் படிங்க : http://thenewscollect.com/the-sadaya-festival-started-with-the-music-of-mangala-on-behalf-of-the-government-the-district-collector-garlands-the-statue-of-mamannan-rajaraja-cholan/

இந்த ஆறு நாட்களும் சைவர்கள் விரதமிருந்து அதிகாலையில் எழுந்து நீராடி பூரண கும்பம் வைத்து விளக்கேற்றி பூசை வழிபாடு செய்வர். பகற்பொழுதில் உணவருந்தாமல், இரவில் பால், பழம் மட்டும் அருந்தி ஏழாம் நாள் பாரணை அருந்தி விரதத்தை நிறைவேற்றுவர்.

Share This Article

Leave a Reply