புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே உள்ளது தீர்த்தான்விடுதி கிராமம் இந்த கிராமத்தில் சாராயம் விற்பது தொடர்பாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்ததையடுத்து போலீசார் அந்த பகுதியில் தீவிர சோதனை நடத்தினர்.அப்போது அந்த பகுதியை சேர்ந்த தென்னரசு என்பவர் சாராயம் விற்றுக்கொண்டிருந்தார். அவரை போலீசார் கைது செய்தனர்..இது இப்போது நடந்ததல்ல 20 ஆண்டுகளுக்கு முன்பு நடந்தது.இப்போது தான் போலீசார் கைது நடவடிக்கை எடுத்துள்ளனர்.ஆனால் இது ரொம்ப லேட் என்கின்றனர் அந்த பகுதி மக்கள்.

கடந்த 2003 ஆம் ஆண்டு கறம்பக்குடி பகுதியில் கள்ளச்சாரம் விற்பனை செய்த வழக்கில் கைது செய்த தென்னரசு என்ற நபரை நீதிமன்றத்திற்கு அழைத்து வந்த போது போலீசாரின் பிடியிலிருந்து தென்னரசு தப்பி ஓடிவிட்டார். தப்பிய குற்றவாளியை 20 ஆண்டுகளுக்கு பின்பு அறந்தாங்கி போலீசார் தற்போது கைது செய்து சிறையில் அடைத்தனர்.
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே உள்ள தீர்த்தான்விடுதி கிராமத்தைச் சேர்ந்த தென்னரசு(41) என்ற நபர் கடந்து 2003 ஆம் ஆண்டு கள்ளச்சாராயம் காய்ச்சி அறந்தாங்கி பகுதியில் விற்பனை செய்து உள்ளார். இதனை அறிந்த போலீசார் அவரை அப்போது கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்துவதற்காக வாகனத்தில் கூட்டி சென்றபோது போலீசாரின் பிடியிலிருந்து தென்னரசு தப்பி ஓடி உள்ளார்.

இதனையடுத்து 20 ஆண்டுகளாக போலீசாரின் பிடியில் சிக்காமல் தென்னரசு தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் தலைமறைவாக வாழ்ந்து வந்துள்ளார்.ஆனால் அந்த வழக்கு மட்டும் நிலுவையில் இருந்துள்ளது. 20 ஆண்டுகளாக போலீசாருக்கு தண்ணி காட்டி வந்த தென்னரசுவை அறந்தாங்கி காவல் ஆய்வாளர் முத்துக்குமார் தலைமையிலான போலீசார் தற்போது அவரது சொந்த ஊரில் வைத்து பிடித்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
20 ஆண்டுகளாக போலீசாருக்கு டிமிக்கி கொடுத்து வந்த சாராய விற்பனை செய்த குற்றவாளியை அறந்தாங்கி போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ள சம்பவம் மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.
ஓ