15 மாதங்கள் கழித்து முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் !

2 Min Read
அமைச்சர் செந்தில் பாலாஜி
  • முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி க்கு ஜாமீன் வழங்கியதை அடுத்து கோவை பூ மார்க்கெட் பகுதியில் தலைமை செயற்குழு உறுப்பினர் ஏர்போட் ராஜேந்திரன் தலைமையில் திமுகவினர் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாட்டம்.

இந்த நிகழ்வில், தொழிலாளர் அணி துணைச் செயலாளர் தமிழ்ச்செல்வன், போனஸ்பாபு, என்ஜினியர் அய்யாசாமி, ஆலாந்துறை ராஜேந்திரன், ரகுநாத், மாணவரணி பிரச்சனா, அருண், ஜெகன், நிகால் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

- Advertisement -
Ad imageAd image

அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டு ஒரு வருடத்துக்கும் மேலாக சிறையிலிருந்த முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டிருக்கிறது உச்ச நீதிமன்றம். செந்தில் பாலாஜியின் வழக்கு கடந்து வந்த பாதையைப் பற்றிய முழுமையான விளக்கம் இங்கே.

அதிமுக சார்பில் கரூர் தொகுதியில் போட்டியில் சட்டமன்ற உறுப்பினரான செந்தில் பாலாஜியை அப்போதைய முதல்வர் ஜெயலலிதா போக்குவரத்துத் துறை அமைச்சர் ஆக்கினார்.

ஓட்டுநர் மற்றும் நடத்துநர் பணி நியமனத்தில் பணம் பெற்றதாக செந்தில் பாலாஜி மீது சர்ச்சை கிளம்பியது. ஓட்டுநர் மற்றும் நடத்துநர் பணி நியமனத்துக்காக லஞ்சமாக பணத்தை வாங்கிவிட்டு ஏமாற்றிவிட்டதாக செந்தில் பாலாஜி மீது தேவசகாயம் என்பவர் புகார் கொடுக்கிறார். ஆனால், முதல் தகவல் அறிக்கையில் செந்தில் பாலாஜியின் பெயரே இல்லாம வழக்குப் பதிவு செய்யப்படுகிறது.

பாதிக்கப்பட்டவர்கள் உயர் நீதிமன்றத்தை நாடவே செந்தில் பாலாஜி மற்றும் அவரின் சகோதரர் உட்பட 40 பேரின் மீதும் சென்னை மத்திய குற்றப்புலனாய்வு துறை வழக்குப் பதிவு செய்கிறது.போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜியை அமைச்சரவையிலிருந்து நீக்கியதோடு மாவட்டச் செயலாளர் பொறுப்பிலிருந்தும் நீக்கினார் ஜெயலலிதா.

இதேவிவகாரத்தில் அருள்மணி என்பவரும் மத்திய குற்றப்புலனாய்வு காவல்துறையிடம் செந்தில் பாலாஜி மீது புகாரளிக்கிறார். இதனைத் தொடர்ந்து சட்டமன்ற – நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் இந்த வழக்கையும் விசாரித்தது.

டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் கட்சியிலிருந்து வெளியேறி திமுக-வில் இணைந்தார் செந்தில் பாலாஜி.செந்தில் பாலாஜியின் விவகாரத்தில் 1.62 கோடி அளவுக்கு சட்டவிரோத பணப்பரிமாற்றம் நடந்திருப்பதாகக் கூறி அமலாக்கத்துறையும் விசாரணையில் இறங்கியது.

திமுக ஆட்சியை பிடித்த சமயத்தில் கரூரில் போட்டியிட்டு வென்ற செந்தில் பாலாஜி மின்சாரம் மற்றும் மதுவிலக்குத் துறை அமைச்சராக்கப்பட்டார்.

சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிராக தர்மராஜ் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்கிறார். இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எஸ். அப்துல் நசீர், ஏ.எஸ்.போபண்ணா, வி.ராமசுப்பிரமணியன் ஆகியோர் அடங்கிய அமர்வு பிறப்பித்துள்ள உத்தரவில், ‘‘பொதுவாக சமரசமாக செல்வது என்ற காரணத்துக்காக குற்ற வழக்குகளை விசாரிக்காமல் ரத்து செய்ய முடியாது.

அமைச்சர் செந்தி்ல் பாலாஜிக்கு எதிரான மோசடி வழக்குகளை ரத்து செய்து உயர் நீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்பு தவறானது என்பதால் அதை நாங்கள் ரத்து செய்கிறோம். வழக்கை தொடக்கத்திலிருந்து விசாரிக்க வேண்டும்.’ என உத்தரவிட்டிருந்தனர்.

 

Share This Article

Leave a Reply