கோயில்களில் வழிபாடு செய்வதற்கு ஒவ்வொரு இந்துக்கும் உரிமை உண்டு – நிர்மலா சீதாராமன்..!

2 Min Read

அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகம் விழாவையொட்டி, காஞ்சி காமாட்சியம்மன் கோயிலில் சிறப்பு ராமபஜனை மற்றும் வழிபாட்டுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதில், ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்து கொண்டு தரிசனம் செய்தார். பின்னர், அவர் நிருபர்களிடம் கூறுகையில்;- தமிழகத்தில் கோயில்களை தவறாக பயன்படுத்தி, இந்துக்களின் வழிபாட்டு உரிமையில் தலையிடுவது சரியல்ல என்றார்.

- Advertisement -
Ad imageAd image

பிரதமர் பங்கேற்கும் அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகம் விழாவை மக்கள் அனைவரும் பார்க்க விரும்புவார்கள். இதனால் கோயில்களில் வழிபட ஒவ்வொரு இந்துவுக்கும் உரிமை உண்டு. இந்துக்களின் உரிமையை பறிக்க நினைக்கக்கூடாது என்றார். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சண்முகம் கூறுகையில்;- காமாட்சியம்மன் கோயிலில் பஜனை மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகள் மட்டுமே நடத்த அனுமதி பெறப்பட்டது. மேலும், கும்பாபிஷேகம் நிகழ்ச்சியை திரைகள் அமைத்து நேரடி ஒளிபரப்பு செய்யமாட்டோம் என்று கடிதம் கொடுத்து இருந்தனர் என்றார்.

நிர்மலா சீதாராமன்

எல்.இ.டி திரையில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது. அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகம் விழாவையொட்டி, காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோயிலில், ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பொதுமக்களுடன் அமர்ந்து, அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகத்தை காணுவதற்கு, எல்.இ.டி திரை அமைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகத்தை காணுவதற்கு உரிய அனுமதி இல்லை எனக்கூறி நேற்று காலை காவல்துறை மூலம் எல்.இ.டி திரைகள் அகற்றப்பட்டது.

இதனை அடுத்து, இந்த கோயிலில் மீண்டும் எல்.இ.டி திரைகள் அமைக்கப்பட்டு, ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உள்பட ஏராளமான பக்தர்கள், எல்.இ.டி திரையில் அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகத்தை பார்த்தனர். காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோயிலில் ராமர் கோயில் திறப்பு விழா நேரடி ஒளிபரப்பு செய்ய எல்.இ.டி திரை வைத்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பொது இடத்தில் இவ்வாறு செய்வதற்கு முன் அனுமதி பெறாததால் அந்த எல்.இ.டி திரையை காவல்துறையினர் அகற்றினர். இது பெரும் சர்ச்சையாக உருவெடுத்தது.

நிர்மலா சீதாராமன்

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உடனடியாக அந்த கோயிலுக்கு நேரில் சென்று சாமி தரிசனம் செய்ததுடன், ராமர் கோயில் திறப்பு விழா நிகழ்ச்சியை ஒளிபரப்பு செய்ய தடை விதிக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்தார். அத்துடன் அதிகார மீறலில் காவல்துறை ஈடுபடுவதாகவும் குற்றம்சாட்டினார். இது தொடர்பாக அவர் அளித்த பேட்டியில்;- அயோத்தியில் ராமர் கோவில் கும்பாபிஷேகத்தால் மக்கள் மகிழ்ச்சியுடன் உள்ளனர்.

தமிழகத்தில் கோவில்களை திமுக அரசு தவறாக பயன்படுத்துகிறது. இந்துக்களின் வழிபாட்டு உரிமையில் திமுக அரசு தலையிடுகிறது. அப்போது கோவில்களில் வழிபாடு செய்ய ஒவ்வொரு இந்துக்கும் உரிமை உண்டு. பிரதமர் பங்கேற்கும் அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகத்தை மக்கள் அனைவரும் பார்க்க விரும்புவார்கள். பிரதமர் மீதான தனிப்பட்ட வெறுப்பை காரணம் காட்டி பக்தர்களை வஞ்சிக்கிறார்கள். இந்துக்கள் உரிமையும், எனது உரிமையும் பறிக்கப்படுகிறது.

Share This Article

Leave a Reply