பாரதிய ஜனதா சார்பில் முதல்வர் வேட்பாளர் அறிவிக்கப்படவில்லை என்றாலும், சிவராஜ் சிங் சவுகானுக்குத்தான் அதிக வாய்ப்புள்ளது. தேதி அறிவிக்கப்படாத நிலையிலும், பா.ஜனதா தலைவர்கள் மத்திய பிரதேசத்தில் தேர்தல் பிரசாரத்தை தொடங்கி விட்டனர். மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர், சிவராஜ் சிங் சவுகானின் தலைமையை (Leader) வெகுவாக பாராட்டினார். அத்துடன் டோனியுடன் ஒப்பிட்டார். டோனி இந்தியாவை வெற்றிகரமாக வழி நடத்தி 2011 உலகக்கோப்பையை வென்றார்.

அதேபோல் சிவராஜ் சிங் சவுகான் வரவிருக்கும் தேர்தலில் வெற்றி வாகை சூடுவார் எனக் குறிப்பிட்டிருந்தார். இதற்கு காங்கிரஸ் கட்சியின் சுர்ஜேவாலா, டோனியுடன் ஒப்பிடுவது, நட்சத்திர வீரர்களை மிகப்பெரிய அளவில் அவமதிப்பதாகும் எனத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து சுர்ஜேவாலா கூறுகையில் ”இந்த ஒப்பீடு மிகப்பெரிய வீரருக்கு மிகமிகப்பெரிய அவதிப்பாகும். சவுகான், பரிசோதனை அடிப்படையில் கூட ஒருவருக்கும் வாய்ப்பு வழங்காதவர். எப்போதெல்லாம் அவர் பேட்டிங் பிடிப்பாரோ?- அப்போதெல்லாம் அவராகவே ஹிட் விக்கெட் ஆவார்.

இங்கே மத்திய பிரதேச அரசு ஹிட் விக்கெட் ஆகிறது” என்றார். மேலும், இந்தியா பெயர் பாரத் என மாற்றப்பட இருப்பதாக வரும் செய்தி குறித்து கேட்டதற்கு ”பா.ஜனதா வேலைவாய்ப்பின்மை, விவசாயம், வறட்சி, இழப்பீடு, பணவீக்கம், வெறுப்பு, வளர்ச்சி போன்றவற்றை பற்றி ஒருபோதும் பேசியது கிடையாது. இதுபோன்ற வலை (சதி), பிரசாரத்தில் மக்களை மத்திய அரசு சிக்க வைக்கும். இது சகுனி வலை போன்றது.” என்றார்.
Leave a Reply
You must be logged in to post a comment.