இந்தியாவில் நேற்று 12 ஆயிரத்திற்கும் குறைவாக இருந்த கொரோனா பாதிப்பு தொற்று எண்ணிக்கை இன்று உயர்ந்துள்ளது. இந்தியாவில் நேற்று 11,692 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில் இன்று 12,193 ஆக உயர்ந்துள்ளது.
நாடு தழுவிய தடுப்பூசி இயக்கத்தின் கீழ் இதுவரை மொத்தம் 220.66 கோடி தடுப்பூசி டோஸ்கள் வழங்கப்பட்டுள்ளன. இதில் 95.21 கோடி இரண்டாம் தவணை தடுப்பூசி டோஸ்களும், 22.87 கோடி முன்னெச்சரிக்கை டோஸ்களும் அடங்கும்.

கடந்த 24 மணி நேரத்தில் 5,602 டோஸ் தடுப்பூசிகள் அளிக்கப்பட்டுள்ளன. இந்தியாவில் தற்போது 67,556 பேர் கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இது 0.15 சதவீதமாகும். தொற்றிலிருந்து மீண்டவர்களின் விகிதம் 98.66 சதவீதம் ஆகும். கடந்த 24 மணி நேரத்தில் 10,765 பேர் பாதிப்பிலிருந்து மீண்டுள்ளனர். இதுவரை குணமடைந்தவர்களின் எண்ணிக்கை மொத்தம் 4,42,83,021 பேர். கடந்த 24 மணி நேரத்தில் 12,193 பேருக்கு புதிதாக தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
தினசரி பாதிப்பு விகிதம் 6.17% வாராந்திர பாதிப்பு விகிதம் 5.29% இதுவரை மொத்தம் 92.52 கோடி சோதனைகள் நடத்தப்பட்டுள்ளன. கடந்த 24 மணி நேரத்தில் 1,97,477 சோதனைகள் நடத்தப்பட்டுள்ளன.
Leave a Reply
You must be logged in to post a comment.