கொடைக்கானலில் பாலியல் புகாரில் திண்டுக்கல் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் கைது..

1 Min Read
அப்துல்கனிராஜா

திண்டுக்கல் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருப்பவர் அப்துல்கனிராஜா(50) இவர் கொடைக்கானல் நாயுடுபுரத்தைச் சேர்ந்தவர் இப் பகுதியில் இவர் சொந்தமாக தங்கும் விடுதி வைத்துள்ளார்.‌‌இவர் கொடைக்கானல் ஹோட்டல் உரிமையாளர்கள் மற்றும் ரிசார்ட்ஸ் சங்கத்தின் தலைவராக இருந்து வருகிறார்,முக்கியமானவர்களுக்கு கொடைக்கானல் பகுதிகளில் இடம் வாங்கி கொடுப்பது,விற்பது போன்ற தொழிலையும் செய்து வருகிறார்.

- Advertisement -
Ad imageAd image

இந் நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு தென் சென்னையிலிருந்து காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முக்கிய பிரமுகர் ராஜசேகர் என்பவர் குடும்பத்துடன் கொடைக்கானல் வந்துள்ளார். இவர் நாயுடுபுரம் பகுதியிலுள்ள அப்துல்கனிராஜாவிற்கு சொந்தமான தங்கும் விடுதியில் குடும்பத்தினருடன் தங்கியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து ராஜசேகர் மற்றும் ஒரு சிலர் திங்கட்கிழமை கொடைக்கானலிலுள்ள சுற்றுலா இடங்களை பார்ப்பதற்காக சென்றனர்.

இவர்கள் தங்கியிருந்த அறையில் ராஜசேகரின் உறவினர் சுமார் 40 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் மட்டும் இருந்துள்ளார். அப்போது அப்துல்கனிராஜா தனியாக தங்கியிருந்த பெண்ணிடம் சென்று பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து அந்தப் பெண் கொடைக்கானல் காவல் நிலையத்தில் அப்துல்கனிராஜா தன்னை பாலியல் தொந்தரவு செய்ததாக புகார் கொடுத்தார்.

இதனைத் தொடர்ந்து கொடைக்கானல் காவல் ஆய்வாளர் பாஸ்டின் தினகரன் வழக்குப் பதிவு செய்து செவ்வாய்க்கிழமை அப்துல்கனிராஜாவிடம் காவல் நிலையத்தில் வைத்து விசாரனை நடத்தினர். அப்போது அப்துல்கனிராஜா தனக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதாக கூறி மயங்கி விழுந்தார். இதனைத் தொடர்ந்து போலீசார் அவரை மீட்டு கொடைக்கானல் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

மருத்துவமனையிலிருந்து அப்துல்கனிராஜாவை நீதிமன்றத்திற்கு காவல் துறையினர் அழைத்து செல்ல முயன்ற போது அவரது உறவினர்கள் சிலர் தடுக்க முயன்றனர்.அப்போது அங்கிருந்த ஏ.டி.எஸ்.பி.சந்திரன் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதைத் தொடர்ந்து பாதுகாப்புடன் அப்துல்கனிராஜா கொடைக்கானல் நீதிமன்றத்தில் ஆஜர் செய்தனர்.

வழக்கை விசாரித்த குற்றவியல் நீதிமன்ற நீதிபதி கார்த்திக் அப்துல்கனிராஜாவை 15−நாட்கள் காவலில் வைக்க உத்தரவிட்டார்.இதனைத் தொடர்ந்து அவர் பலத்த பாதுகாப்புடன் திண்டுக்கல் சிறைச் சாலைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

Share This Article

Leave a Reply