கோவை சிறுவாணி, ஆழியார் அணை நீர்மட்டம் அதிகரிப்பு – பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி..!

2 Min Read

தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து பெய்து வருகிறது. இந்த நிலையில் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் கடந்த மூன்று நாட்களாக விடாமல் தொடர் கனமழை பெய்து வருகிறது.

- Advertisement -
Ad imageAd image

இதனால் கோவை மாவட்டம், பொள்ளாச்சி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள குளம், ஏரி உள்ளிட்ட நீர் நிலைகளில் நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது. இந்த நிலையில் அதிக கனமழை காரணமாக ஆழியாறு அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்துள்ளது.

ஆழியார் அணை நீர்மட்டம் அதிகரிப்பு

இன்றைய தற்போதைய நிலவரப்படி ஒரே நாளில் அணையின் நீர்மட்டம் 5 அடி உயர்ந்துள்ளது. இன்று காலை 7 மணி நிலவரப்படி 120 அடி கொள்ளளவு கொண்ட ஆழியாறு அணை நீர்மட்டம் 95.80 அடியாக உள்ளது. நேற்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 91 அடியை எட்டி இருந்தது.

இந்த நிலையில் அணைக்கு வினாடிக்கு 3,356 கன அடி தண்ணீர் வரத்துள்ளது. அணையில் இருந்து வினாடிக்கு 84 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுவதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் அப்பகுதியில் இருக்கும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சிறுவாணி அணை நீர்மட்டம் அதிகரிப்பு

இதேபோல கோவையின் முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்கும் சிறுவாணி அணை நீர்மட்டம் உயர்ந்துள்ளது. கோவை மேற்கு மலை தொடர்ச்சி பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் சிறுவாணி அணை நீர்மட்டம் நான்கு வாரத்தில் மட்டும் 27.5 அடியாக உயர்ந்து தற்போது 38.67அடியாக உயர்ந்து இருக்கின்றது.

மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்து இருக்கின்றது சிறுவாணி அணை. அணையில் இருந்து பெறப்படும் நீரானது கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட 22 வார்டுகள்,கோவை மாவட்டத்தின் மேற்கு பகுதியில் உள்ள டவுன் பஞ்சாயத்துகள் மற்றும் கிராம ஊராட்சிகளுக்கு குடிநீர் ஆதாரமாக இருக்கின்றன.

பொதுப்பணித்துறை

இந்த நிலையில் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் பெய்து வரும் கனமழையினால் சிறுவாணி அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் மூன்று அடிக்கு மேல் உயர்ந்து இருக்கிறது. தற்பொழுது சிறுவாணி அணை நீர் மட்டம் 38.67 அடி உயர்ந்து உள்ளன.

மழை இன்றி கோடை காலத்தில் கடும் வறட்சியில் இருந்த சிறுவாணி அணை, கனமழையினால் நிரம்ப ஆரம்பித்து இருக்கின்றது. கடந்த ஜூன் மாதம் 23 ஆம் தேதி 11.32 அடியாக இருந்த நிலையில் இன்று 38.67 அடியாக உயர்ந்து இருக்கின்றது.

பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி

நான்கு வாரத்துக்குள் 27.5 அடி நீர்மட்டம் உயர்ந்து இருக்கின்ற நிலையில் மலை அடிவாரத்தில் 7 சென்டிமீட்டர் மழை பெய்து இருந்த நிலையில் அணைக்கட்டு பகுதியில் 9 சென்டிமீட்டர் மழை பெய்து உள்ளது.

மேற்கு தொடர்ச்சி மலையில் கனமழை பெய்வதால் அணையின் முழு கொள்ளளவான 45 அடி விரைவில் சிறுவாணி அணை எட்டும் என்று எதிர்பார்க்கின்றது.

Share This Article

Leave a Reply