ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு : உண்மை குற்றவாளிகளுக்கு விரைவில் தண்டனை – முதல்வர் ஸ்டாலின்..!

2 Min Read

சென்னையில் படுகொலை செய்யப்பட்ட பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் இல்லத்துக்கு நேரில் சென்று அவரது குடும்பத்தினருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆறுதல் தெரிவித்தார்.பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்தவர் ஆம்ஸ்ட்ராங்(52). இவர் கடந்த 5-ம் தேதி பெரம்பூர் வேணுகோபால் சுவாமி கோயில் தெருவில் உள்ள அவரது வீட்டின் முன்பு மர்ம கும்பலால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.

- Advertisement -
Ad imageAd image
முதல்வர் ஆருதல்

இந்தக் கொலை தொடர்பாக செம்பியம் காவல் நிலைய போலீஸார் 10 தனிப்படைகளை அமைத்து துப்பு துலக்கினர். தொடர்ந்து, மறைந்த பிரபல ரவுடி ஆற்காடு சுரேஷின் தம்பி ராணிப்பேட்டை மாவட்டம், காட்பாடி பொன்னை பகுதியைச் சேர்ந்த பொன்னை பாலு (39) மற்றும் அவரது கூட்டாளிகள் 10 பேர் என மொத்தம் 11 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து கொலை தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது.

இதுவரை 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.முன்னதாக, ஆம்ஸ்ர்டாங்கின் உடலுக்கு அஞ்சலி செலுத்த வந்த பகுஜன் சாமாஜ் கட்சியின் தேசிய தலைவர் ,மாயாவதி .. “தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை. இந்த வழக்கில் உண்மை குற்றவாளிகள் கண்டறியப்படவில்லை.” போன்ற குற்றச்சாட்டுக்களை முன்வைத்தார்.

இந்த நிலையில், படுகொலை செய்யப்பட்ட ஆம்ஸ்ட்ராங் இல்லத்துக்கு இன்று (செவ்வாய்க் கிழமை) நேரில் சென்று அவரது குடும்பத்தினருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆறுதல் தெரிவித்தார். சென்னை அயனவரத்தில் உள்ள ஆம்ஸ்ட்ராங் இல்லத்துக்கு சென்று அவரின் உருவப் படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்பு, ஆம்ஸ்ட்ராங் மனைவிக்கு ஆறுதல் கூறினார் முதல்வர் ஸ்டாலின். இந்த நிகழ்வின்போது அமைச்சர் சேகர் பாபு உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

சந்திப்பின்போது ஆம்ஸ்ட்ராங் மனைவியிடம், “இவ்வழக்கில் தொடர்ந்து தீவிர விசாரணை மேற்கொண்டு, இந்தக் கொடுங் குற்றச் செயலில் ஈடுபட்டவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டு, சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள்” என்றும் முதல்வர் ஸ்டாலின் உறுதியளித்தார் என்று தமிழக அரசு வெளியிட்ட செய்திகுறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து இவ்வழக்கினை மேலும் தீவிரப்படுத்தும் விதமாக சென்னை மாநகர காவல் ஆணையர் சந்தீப்ராய் ரத்தோர் அதிரடியாக மாற்றப்பட்டு, அவருக்கு பதிலாக ஒழுங்கு ADGP ஆக இருந்த அருண் கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்தவகையில், இவ்வழக்கில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தற்போது முதலமைச்சர் நம்பிக்கை தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

 

Share This Article

Leave a Reply