காலை உணவுத்திட்டம், மகளிர் உரிமைத்தொகை, கட்டணமில்லா பேருந்து பயணம் என பல்வேறு திட்டங்களால் வறுமையில்லா தமிழ்நாட்டை உருவாக்கியவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் – அமைச்சர் ராஜகண்ணப்பன்
திருவள்ளுர் மாவட்டம் பொன்னேரி அடுத்த அத்திப்பட்டில் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் அமைச்சர் ராஜகண்ணப்பன், திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி ஆகியோர் பங்கேற்று நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.

நிகழ்ச்சியில் அமைச்சர் ராஜகண்ணப்பன் பேசுகையில் காலை உணவுத்திட்டம், மகளிர் உரிமைத்தொகை, கட்டணமில்லா பேருந்து பயணம் என பல்வேறு திட்டங்களால் வறுமையில்லா தமிழ்நாட்டை உருவாக்கியவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் என பெருமிதம் தெரிவித்தார்.
புதுமைப்பெண் திட்டத்தின் மூலம் உயர்கல்வி பயிலும் மாணவிகளை ஊக்குவித்து 51%பேர் உயர்கல்வி பயில்வதாக கூறினார். எம்ஜிஆர், ஜெயலலிதா, அண்ணா, கலைஞர், தளபதி என திராவிட பூமி ஆட்சி தான் எனவும், வேறு கட்சி ஆட்சி செய்ய முடியாது, தேசிய கட்சிகள் ஆட்சி செய்ய முடியாது எனவும், திராவிட கட்சி தான் ஆட்சி செய்ய முடியும் எனவும் 2026-இல் தமிழ்நாட்டில் ஸ்டாலின் தான் முதல்வராக வருவார் என்றார்.

ஜாதி மத பேதமின்றி திராவிட மாடல் ஆட்சி நடைபெற்று வருவதாக கூறிய அவர் . முதுகுளத்தூரில் சுதந்திரத்திற்கு பின் குடிநீர் இல்லை, முதலமைச்சர் ஆட்சிக்கு வந்த பிறகே குடிநீர் கிடைத்தது என்றார்.
பதவிக்கு வருவது எளிது எனவும் அதை தக்க வைப்பது கஷ்டம் என்றார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சரிடம் திமுக அரசு ஜாதி பாகுபாடு இல்லாமல் செயல்படுகிறது என்றால் மற்ற கட்சிகள் ஜாதி பாகுபாடு பார்க்கிறதா என்ற கேள்விக்கு, நாம் பாகுபாடு பார்க்கவில்லை என தான் கூறினேன் எனவும் யாரையும் குறை கூறவில்லை என்றும் அனைவரும் ஜாதி பாகுபாடு பார்க்காமல் இருந்தால் நலம் என்று கூறினார் .
அவரை தொடர்ந்து ஆர்.எஸ்.பாரதி பேசுகையில் உள்ளாட்சி அமைப்புகளில் நல்ல பெயர் வாங்குவது மிகவும் கடினமானது எனவும், மக்களின் அன்றாட தேவைகளை பூர்த்தி செய்வது உள்ளாட்சி பிரதிநிதிகள் தான் எனவும் அவர் பேசினார் . உள்ளாட்சி அமைப்பில் பணியாற்றி நல்ல பெயர் வாங்குவது அரிதான விஷயம் என்றார். உள்ளாட்சி மன்ற நிர்வாகிகளின் செயல்பாடுகளால் தான் கட்சிக்கும், ஆட்சிக்கும் நல்ல பெயர் கிடைக்கும் என்றார்.
கொஞ்சம் இதையும் படிங்க: http://thenewscollect.com/increasing-robbery-activities-at-thanjavur-bypass-road-motorists-seeks-additional-police-security/
1986ல் எம்ஜிஆர் நேரடியாக பிரச்சாரம் செய்தும் திமுக உள்ளாட்சியில் வெற்றி பெற்றதாகவும், அதன் பிறகு 1989ல் திமுக ஆட்சிக்கு வந்ததாகவும், உள்ளாட்சியில் செயல்படுவதை பார்த்து தான் அந்த கட்சியை மக்கள் ஆட்சியில் அமர வைப்பார்கள் என தெரிவித்தார்.
திருவள்ளூரில் அரசியல் செய்து விட்டால் ஐ நா சபைக்கு சென்றும் அரசியல் செய்யலாம் என்றார்.
Leave a Reply
You must be logged in to post a comment.