ஆந்திராவில் ஆட்சியமைக்கும் சந்திரபாபு நாயுடு: அன்புமணி ராமதாஸ் வாழ்த்து

1 Min Read
அன்புமணி ராமதாஸ்

ஆந்திர மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்று முதலமைச்சராக பொறுப்பேற்கவுள்ள சந்திரபாபு நாயுடுவுக்கு அன்புமணி ராமதாஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

- Advertisement -
Ad imageAd image

இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பதிவில், “ஆந்திர மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் மூன்றில் இரு பங்கு பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று முதலமைச்சராக பொறுப்பேற்கவுள்ள தெலுங்குதேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடுவுக்கு பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அன்புமணி இராமதாஸ்

கடந்த ஆட்சிக்காலங்களில் நீங்கள் செயல்படுத்திய திட்டங்களும், 2024 தேர்தலில் மக்களுக்கு நீங்கள் அளித்த வாக்குறுதிகளும் உங்கள் தலைமையிலான அணியின் வெற்றிக்கு காரணமாக அமைந்துள்ளன.

ஆந்திர மக்களுக்கு நல்லாட்சி வழங்க எனது வாழ்த்துகளை மீண்டும் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.

Share This Article

Leave a Reply