வத்தலக்குண்டில் காய்கறி கடையில் காய்கறி திருடும் இளைஞர் சிசிடிவி காட்சி வெளியானது

1 Min Read
சிசிடிவி காட்சிகள்

திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு அருகே அண்ணா நகரில் மதுரை  சாலையில் செந்தில்குமார் என்பவர் காய்கறி கடை வைத்துள்ளார்
இந்நிலையில் இவர் கடையில் இரவு நேரங்களில் நாள்தோறும் காய்கறி திருடு போய் உள்ளது
இதனைத் தொடர்ந்து செந்தில்குமார் கடையில் சிசிடிவி  கேமரா பொறுத்தி கண்காணித்தார்
இரவு காய்கறி கடைக்குள் புகுந்து வரும் தாடியுடன் கூடிய இளைஞர் ஒருவர் கடையில் இருந்த ஒரு சாக்கு பையை எடுத்து சாவகாசமாக தனக்கு தேவையான காய்கறிகளை ஒவ்வொன்றாக கடையில் சென்று வாங்குவது போல் தரம் பார்த்து எடுத்து பையினுள் போடுகிறார்.

- Advertisement -
Ad imageAd image
காய்கறி கடை

முட்டைக்கோஸ், வெங்காயம், பச்சை மிளகாய், கேரட் தேங்காய் என தனக்குத் தேவையான காய்கறிகளை மட்டும் நிரப்பிக் கொண்டு கிளம்பும் தருவாயில் நிமிர்ந்து பார்த்தபோது கேமரா தன்னை கண்காணிப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து நெஞ்சில் கை வைக்கும் அந்த இளைஞர் சரி ஆனது ஆச்சு என்ற மனநிலையில் திருடிய காய்கறிகளை எடுத்துக்கொண்டு கடையை விட்டு கிளம்புகின்றார்
இதனைத் தொடர்ந்து காய்கறி கடை உரிமையாளர் செந்தில் குமார் வத்தலகுண்டு காவல் நிலையத்தில் புகார் அளித்தார் அதன் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட போலீசார் அதே பகுதியில் பாஸ்ட் ஃபுட் கடை நடத்தி வரும் இளைஞர் ஒருவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்
இளைஞர் காய்கறி திருடும் சிசிடிவி காட்சி தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது

Share This Article

Leave a Reply