கன்னியாகுமரி மாவட்டம் அடுத்த ஈத்தாமொழி அருகே உள்ள பைக் மீது கார் மோதிய விபத்தில் காரின் அடியில் சிக்கிய பள்ளி மாணவனை கார் இழுத்து சென்றதில் தீயில் கருகி பரிதாபமாக உயிரிழந்தார். நெஞ்சை பதற வைக்கும் இக்கோர விபத்து அரங்கேறியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம், ஈத்தாமொழியை தெற்குபால் கிணற்றான் விளையை பகுதியை சேர்ந்தவர் கோபி வயது (39). இவர் ஈத்தாமொழி மற்றும் கன்னியாகுமரியில் பெயிண்ட் கடை நடத்தி வருகிறார். இன்று விடுமுறை என்பதால் மனைவி லேகா வயது (30) மற்றும் குழந்தைகளை அழைத்து கொண்டு இன்று மதியம் வீட்டிலிருந்து சங்குதுறைபீச்சுக்கு புறப்பட்டனர்.

அப்போது கார் ஈத்தாமொழி செம்பொன்கரை பகுதியில் வந்த போது காரின் முன்னால் சென்ற பைக் மீது பயங்கரமாக மோதியுள்ளது. திடிரேன மோதிய வேகத்தில் காரின் முன் பகுதியில் பைக் சிக்கியிருப்பதை அறியாத கோபி காரை வேகமாக ஓட்டியுள்ளார்.
இதனை நேரில் பார்த்த அந்த பகுதி பொதுமக்கள் காரை நிறுத்துமாறு கத்தி கூச்சலிட்டனர். மேலும் இளைஞர்கள் காரை நிறுத்துமாறு பைக்கில் வேகமாக பின்தொடர்ந்தனர். ஆனால் அதற்குள் கார் சங்குத்துறை பீச்சிற்கு வந்தது .அப்போது காரின் முன்பகுதி திடீரென தீ பிடித்து எரிந்தது.

இதனால் பதறிய கோபி மற்றும் மனைவி, குழந்தைகள் காரில் இருந்து தப்பி ஓடினர். இதற்கு இடையே கார் முற்றிலுமாக எரிந்து சாம்பலானது. இது பற்றி தகவல் அறிந்த போலீசார், நாகர்கோவில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து காரில் பற்றி எரிந்த தீயை தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து அனைத்தனர்.
இது குறித்து போலீசார் நடத்திய விசாரணையில் காரும் பைக்கும் மோதிய வேகத்தில் சிறுவன், காரின் அடியில் சிக்கியுள்ளான். பின்னர் கார் தரதர என சுமார் மூன்று கிலோமீட்டர் இழுத்துச் சென்றுள்ளது. இதனை பார்த்த பொதுமக்கள் காரை நிறுத்துமாறு கூச்சலிட்டனர். அதற்குள் கார் சங்குத்துறை பீச்சிற்கு வந்துவிட்டது.

அப்போது கார் தீப்பிடித்து எரிந்ததை கண்டு காரில் இருந்த அனைவரும் கீழே இறங்கினர். அதற்குள் காரும், காரின் அடியில் சிக்கிய சிறுவனும் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பலியானார். மேலும் காரின் முன் பகுதியில் உடல் சிக்கியிருந்த நிலையில் கார் தீ பிடித்ததால் உடல் கருகி கிடந்தது.
பொதுமக்கள் உதவியுடன் காரில் சிக்கி இருந்த சிறுவன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். சுசீந்திரம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். 15 வயது சிறுவன் கார் மோதி சாலையில் தரதர என இழுத்து செல்லப்பட்டு கொடூரமாக உயிரிழந்த சம்பவம் உறவினர்களிடம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
பள்ளி மாணவன் பலியான சிறுவன் தெற்கு சூரங்குடி பள்ளி தெருவை சேர்ந்த அபுபக்கர் சித்திக் என்பவரது மகன் அஜாஸ் வயது (25) சுண்டபற்றிவிளை பகுதியில் உள்ள ஒரு அரசு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

பின்பு காரின் அடியில் சிக்கி பள்ளி மாணவன் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Leave a Reply
You must be logged in to post a comment.