செங்குன்றம் திமுக பிரமுகர் வீட்டின் அருகே பெட்ரோல் நிரப்பிய கேன்கள் , பின்னணி என்ன ?

2 Min Read
பெட்ரோல் நிரப்பப்பட்ட கேன்கள்

செங்குன்றம் திமுக ஒன்றிய குழு பெருந்தலைவர் வீட்டின் அருகே பெட்ரோல் நிரப்பப்பட்ட கேன்களில் பேட்டரி இணைத்து வைக்க பட்டிருந்ததால் பரபரப்பு. பெட்ரோல் குண்டு வீச முயற்சியா என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணை.

- Advertisement -
Ad imageAd image

திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் அடுத்த புள்ளிலைன் பகுதியைச் சேர்ந்தவர் திமுக முன்னாள் ஒன்றிய செயலாளர் திருமால். இவரது மனைவி தங்கமணி திருமால் புழல் ஊராட்சி ஒன்றியக்குழு பெருந்தலைவராக பொறுப்பு வகித்து வருகிறார்.

இன்று நண்பகல் இவரது வீட்டின் வெளியே கழிவு நீர் செல்லும் கால்வாயின் மேல் மூன்று பிளாஸ்டிக் கேன்களில் பெட்ரோல் நிரப்பப்பட்டு , அவை மூன்றாயும் ஒன்றாக டேப்பால் சுற்றி பேட்டரியுடன் இணைக்கப்பட்டு வைக்கப்பட்டுள்ளது.

திமுக ஒன்றிய குழு பெருந்தலைவர் வீடு

தங்கமணியின் வீடு வழியாக நடந்து சென்ற அப்பகுதி மக்கள் அங்கு வித்தியாசமாக சுற்றிவைக்கப்பட்ட பெட்ரோல் நிரப்பிய கேன்களை கண்டு அதிர்ச்சி அடைந்தனர் .

மேலும் இது குறித்து உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த செங்குன்றம் காவல்துறையினர் பேட்டரியுடன் பெட்ரோல் நிரப்பப்பட்ட கேன்களை கைப்பற்றி தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

முன்விரோதம் காரணமாக பெட்ரோல் குண்டு வீசுவதற்காக தயாரிக்கப்பட்டு வைக்கப்பட்டதா அல்லது மர்ம நபர்கள் யாரேனும் அச்சுறுத்துவதற்காக இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டுள்ளார்களா என்பது குறித்து சாலைகளில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

சம்பவ இடத்தில் போலீசார் விசாரணை

திமுக ஒன்றிய குழு பெருந்தலைவர் தங்கமணி திருமால் குடும்பத்துடன் வெளியே சென்று இருந்த நிலையில் இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது. அண்மையில் சுதந்திர தினத்தன்று சோழவரத்தில் திமுக பிரமுகர் வீடு உட்பட இரண்டு இடங்களில் நாட்டு வெடிகுண்டு வீசப்பட்ட சூழலில் தற்போது திமுக ஒன்றிய குழு பெருந்தலைவர் வீட்டின் அருகே கேன்களில் பெட்ரோல் நிரப்பப்பட்டு அவை பேட்டரி உடன் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் திருவள்ளூர் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து காவல் துறை அதிகாரி ஒருவரை தொடர்பு கொண்டு கேட்டபோது , இந்த சம்பவம் குறித்து கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறோம் , விரைவில் முழு விவரமும் வெளியிடபடும் என்று கூறினார் .

Share This Article

Leave a Reply