செஞ்சி அருகே தந்தையின் பென்ஷன் பணத்தில் பங்கு கொடுக்காததால் மின் ஊழியரை இரும்பு ராடால் அடித்து கொலை செய்த அவரது அண்ணனை போலீசார் கைது செய்தனர்.

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி தேசூர்பாட்டை பகுதியை சேர்ந்தவர் பாபு. இவரது மனைவி ராணி. இவர்களது மகன்கள் இரண்டு மகன்கள் உள்ளன. இவரது மகன்களான; முருகன் வயது 38, தாமோதரன் வயது 33 இதில் தாமோதரன் மின் ஊழியராகவும், முருகன் தொழிலாளியாகவும் வேலை பார்த்து வருகின்றனர். மின் ஊழியராக பணிபுரிந்து வந்த பாபு இறந்ததடுத்து அவருக்கான பென்ஷன் பணத்தை ராணி வாங்கி வந்தார். இந்த பணத்தை அவருடன் வசித்து வந்த தாமோதரன் வாங்கி செலவு செய்து வந்ததாக தெரிகிறது.

இதை அறிந்த முருகன் பென்ஷன் பணத்தில் எனக்கும் பங்கு வேண்டும் என கேட்டதாக தெரிகிறது. இதனால் அண்ணன் தம்பி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் தாமோதரனிடம் பென்ஷன் பணம் குறித்த முருகன் கேட்டதாக தெரிகிறது. அப்போது அவர்களுக்கு இடையே வாய் தகராறு பிரச்சனை ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த முருகன் இரும்பு ராடால் தாமோதரனை தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் தலையில் பலத்த காயமடைந்த தாமோதரன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்த தகவலின் பேரில் செஞ்சி போலீஸ் இன்ஸ்பெக்டர் பார்த்தசாரதி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தாமோதரனின் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து முருகனை கைது செய்து விசாரணை நடத்தி மேற்கொண்டு வருகின்றனர். தந்தையின் பென்ஷன் பணத்தை வாங்குவது தொடர்பாக ஏற்பட்ட தகராறில் மின் ஊழியரை சொந்த அண்ணனை கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Leave a Reply
You must be logged in to post a comment.