கோயில் திருவிழாவுக்கு சென்ற போது வீட்டின் பூட்டை உடைத்து 8 பவுன் நகை, ரூபாய் 50 ஆயிரம் மற்றும் வெள்ளி பொருட்களை கொள்ளை அடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
கடலூர் மாவட்டம், அடுத்த குள்ளஞ்சாவடி அருகே உள்ள சந்தைப்பேட்டை கிராமத்தை சேர்ந்தவர் ரத்தீஷ் வயது (36). இவர் அபுதாபியில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி சவுமியா வயது (24). இவர்களுக்கு திருமணம் ஆகி 7 வருடங்கள் ஆன நிலையில் 2 குழந்தைகள் உள்ளனர். அப்போது கணவர் வெளிநாட்டில் இருப்பதால் மனைவி சவுமியா தனது குழந்தைகள் மற்றும் மாமியாருடன் வசித்து வருகிறார்.

இந்த நிலையில் கடந்த 3 ஆம் தேதி மாலை 6 மணி அளவில் சவுமியா அவரது மாமியார் மற்றும் குழந்தைகளுடன் கோ. சத்திரத்தில் உள்ள கன்னியம்மன் கோயில் திருவிழாவிற்கு சென்றனர். அப்போது கோவில் திருவிழா முடிந்து பிறகு நேற்று முன்தினம் மாலை 5 மணி அளவில் வீடு திரும்பினர். அப்போது, வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைந்து கிடந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
பின்னர் வீட்டின் உள்ளே சென்று பார்த்த போது, ரூம் அறையில் பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த 5 பவுன் செயின், மோதிரம், தோடு என 8 பவுன் மற்றும் வெள்ளி கொலுசு, வெள்ளி குங்குமச்சிமிழ் மற்றும் ரூபாய் 50 ஆயிரம் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளை அடித்துச் சென்றது தெரியவந்தது.

அப்போது உடனே காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். அப்போது தகவல் அறிந்து வந்த குள்ளஞ்சாவடி போலீசார் சம்பவ இடத்திற்கு விறைந்து சென்று அந்த இடத்தை முழுவதும் பார்வையிட்டு, கை ரேகை நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் உதவியுடன் சோதனை நடத்தினர்.
அப்போது கொள்ளை அடித்து போன நகைகள், பணம், வெள்ளி பொருட்களின் மதிப்பு ரூபாய் 5 லட்சம் இருக்கும். மேலும் சவுமியா கொடுத்த புகாரின் அடிப்படையில், குள்ளஞ்சாவடி போலீசார் வழக்கு பதிவு செய்து கொள்ளை அடித்துச் சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Leave a Reply
You must be logged in to post a comment.