சர்க்கரை ஆலை தொழிலாளர்களுக்கு போனஸ்..!

2 Min Read

கூட்டுறவு மற்றும் பொதுத்துறை சர்க்கரை ஆலைகளில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு 10% போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது; தமிழ்நாட்டில் 16 கூட்டுறவு மற்றும் 2 பொதுத்துறை சர்க்கரை ஆலைகள் உள்ளன. கரும்பு விவசாயிகளின் நலனை பாதுகாக்கவும், சாகுபடி பரப்பை அதிகரிக்கவும், சர்க்கரை ஆலைகளில் செயல் திறனை அதிகரிக்கவும், இவ்வரசு பல்வேறு ஆக்கப்பூர்வமான பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக ஒவ்வொரு பருவத்திற்கும், கரும்பு விவசாயிகளுக்,கு ஒன்றிய அரசு நிர்ணயம் செய்யும் கரும்பு விலைக்கு மேல் கூடுதலாக சிறப்பு ஊக்குத்தொகை வழங்கி வருகிறது.

- Advertisement -
Ad imageAd image
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அரசாங்கத்தின் படி சர்க்கரை ஆலை தொழிலாளர்களுக்கு போனஸ்

கூட்டுறவு மற்றும் பொதுத்துறை சர்க்கரை ஆலைகளில் பணிபுரிந்து வரும் தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்கள் அனைவரும் எதிர் வரும் தீபாவளி பண்டிகையை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் வகையில், முதலமைச்சர் 2022 – 2023 ஆம் ஆண்டிற்கான போனஸ் மற்றும் கருணைத்தொகை வழங்க ஆணையிட்டுள்ளார். அதன் அடிப்படையில் ஒதுக்கீட்டு உபரி உள்ள சுப்பிரமணிய சிவா மற்றும் கள்ளக்குறிச்சி 2 ஆகிய இரு கூட்டுறவு சர்க்கரை ஆலைகளுக்கும் போனஸ் மிகை ஊதியமாக 8.33 சதவீதம் மற்றும் கருணைத் தொகையாக 11.67% என மொத்தம் 20 சதவீதம் போனஸ் வழங்கும் மீதமுள்ள 14 கூட்டுறவு மற்றும் இரண்டு பொதுத்துறை சர்க்கரை ஆலைகளுக்கு போனஸ் ஊதியமாக 8.33% மற்றும் கருணைத்தொகை ஆக 1.67% என மொத்தம் 10 சதவீதம் போனஸ் வழங்கும் என ஆணையிட்டுள்ளார்.

சர்க்கரை ஆலை

இதன் மூலம் தமிழ்நாட்டில் உள்ள 16 கூட்டறவு மற்றும் 2 பொதுத்துறை சர்க்கரை ஆலைகளில் பணிபுரியும் சுமார் 6,103 தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்களுக்கு 2022 – 2023 ஆம் ஆண்டிற்கான போனஸ் ஊதியம் மற்றும் கருணைத்தொகை வழங்க ரூபாய் 4 கோடியே 15 லட்சம் செலவினம் ஏற்படும். இதன் மூலம் அனைத்து கூட்டமும் மற்றும் பொதுத்துறை சர்க்கரை ஆலைகளில் பணிபுரியும் தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்கள் எதிர் வரும் காலங்களில் சிறப்பாக பணிபுரிந்து கரும்பு விவசாயிகள் மற்றும் சர்க்கரை ஆலைகளில் வளர்ச்சிக்கும் உதவும் சூழ்நிலை உருவாகும் எவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Share This Article

Leave a Reply